Don't Miss!
- Sports
தோனி தான் எனக்கு ஃபர்ஸ்ட்.. அப்புறம் தான் நாடு.. சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் நெகிழ்ச்சி பேச்சு
- News
பிராமணர் என்பதற்காகவே வெறுப்பதா? இதுவும் தீண்டாமைதான் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நோ பார்க்கிங்கில் கார்: கன்னட முன்னணி ஹீரோ தர்ஷனுக்கு அபராதம் விதித்த பெங்களூரு போலீஸ்
பெங்களூரு: நோ-பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தியதற்காக, கன்னட சினிமாவின் முன்னணி கதாநாயகன் தர்ஷன் காருக்கு அபராதம் விதித்துள்ளனர் பெங்களூரு போலீசார்.
கன்னட திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தர்ஷன். 63 படங்களில் நடித்துள்ளார், 3 படங்களை தயாரித்துள்ளார். இவரிடம் ஆடி நிறுவனத்தின் கியூ-7 வகை கார் உள்ளது.
பெங்களூரு காந்திநகரிலுள்ள மதசார்பற்ற ஜனதாதள தலைமை அலுவலகத்தின் வெளியே, இன்று, இந்த காரை நிறுத்தி வைத்துவிட்டு, தனிப்பட்ட வேலைக்காக தர்ஷன் சென்றிருந்தார்.

ஆனால், கார் நிறுத்தப்பட்ட பகுதி நோ-பார்க்கிங் ஏரியாவாகும். எனவே டிராபிக் போலீசார், அந்த காருக்கு அபராதம் விதித்தனர். அப்போதுதான், காரின் பக்கவாட்டு கண்ணாடிகளில் கறுப்பு பிலிம் ஒட்டப்பட்டிருந்ததையும் போலீசார் கவனித்துள்ளனர். எனவே, அதற்கும் சேர்த்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
கடந்த வாரம்தான், கன்னட திரையுலகின் மற்றொரு ஹீரோவான துனியா விஜய் காரில் கருப்பு பிலிம் ஒட்டியிருந்ததற்காக அபராத விதிப்புக்கு உள்ளானார் என்பது நினைவிருக்கலாம்.
செல்வாக்கு உள்ள நடிகர்களுக்கே இந்த நிலை என்றால், நம்மை போலீசார் சும்மா விட்டுவிடுவார்களா என்ற அச்சம், இவ்விரு சம்பவங்களால், பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ளது.