பாடகி சுசித்ராவை அடுத்து ட்விட்டர் கணக்கிற்கு பூட்டு போட்ட டிடி
சென்னை: பாடகி சுசித்ராவை அடுத்து டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான திவ்யதர்ஷினி தனது ட்விட்டர் கணக்கை பூட்டு போட்டு வைத்துள்ளார்.
பாடகி சுசித்ரா நள்ளிரவு பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தாக்கியதில் காயம் அடைந்த தனது கையை புகைப்படம் எடுத்து ட்வீட்டினார். அதன் பிறகு ட்விட்டரில் ஒரு சில அதிரடிகளை வெளியிட்டார்.

திடீர் என தனது கணக்கிற்கு பூட்டு போட்டு வைத்துவிட்டார். அதாவது ட்விட்டரில் ஏற்கனவே அவரை ஃபாலோ செய்பவர்களால் மட்டுமே அவரது ட்வீட்டுகளை பார்க்க முடியும்.
இந்நிலையில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி எனப்படும் திவ்யதர்ஷினியும் தனது ட்விட்டர் கணக்கிற்கு பூட்டு போட்டுள்ளார். டிடி ஒருவரை கட்டிப்பிடித்திருந்த போட்டோவை ட்விட்டரில் சுசித்ரா வெளியிட்டிருந்தார்.
சர்ச்சை புகைப்படம் வெளியான நேரத்தில் டிடி இவ்வாறு செய்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications