Don't Miss!
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டெல்லி கொலை..2020 ஆம் ஆண்டே காதலி உதவி கேட்டு போலீஸுக்கு எழுதிய புகார்..கங்கனா ரனாவத் வெளியிட்டார்
டெல்லியில் காதலனுடன் சேர்ந்து லிவிங் டு கெதர் வாழ்ந்த காதலி 36 துண்டுகளாக வெட்டி கொலைச் செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டே தன்னை காதலன் கொலை செய்ய முயல்வதாக பாதுகாப்பு கேட்டு காதலி ஷ்ரதாவாக்கர் எழுதிய கடிதத்தை கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ள்ளார்.
இந்த தகவல் பரபரப்பாக பகிரப்படுகிறது, 2 ஆண்டுகளுக்கு முன் புகாரை பெற்ற போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
லிவிங் டு கெதரில் வாழ்ந்த ஜோடி
மும்பையை சேர்ந்தவர் அப்தாப் அமீன். இவர் செஃப் ஆக இருந்தார். இவருக்கும் மும்பையைச் சேர்ந்த மென் பொறியாளர் ஷ்ரத்தா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்துள்ளது. மும்பையில் Bumble என்ற டேட்டிங் ஆஃப் மூலம் பழக்கம் ஏற்பட்டு அங்கு லிவ் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். இதனால் ஷ்ரத்தாவின் பெற்றோர் ஷ்ரத்தாவை ஒதுக்கி வைத்தனர். இதனால் இருவரும் ஹிமாச்சல பிரதேசுக்கு சென்று வசித்தனர் பின்னர் டெல்லி திரும்பிய இருவரும் டெல்லியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
லிவிங் டு கெதர் வாழ்க்கை உயிரையே பறிக்க காரணமானது
இதற்கிடையே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டு செலவுகள் யார் செய்வது தொடங்கி பல தகராறுகள் இருந்து வந்துள்ளது. அப்தாப்புக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை ஷ்ரத்தா கண்டுபிடித்துள்ளார். இதன் பின்னர் தகராறு அதிகரித்துள்ளது. லிவிங் டு கெதர் உறவு தொடர வேண்டாம் என ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி அப்தாப்பிடம் அடிக்கடி சண்டை இட்டு வந்துள்ளார்.
கொலை செய்து உடலை சாகசமாக மறைத்த காதலன்
அதற்கு அப்தாப் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 18 ஆம் தேதி வீட்டு மளிகை சாமான் வாங்குவது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஷரத்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் அப்தாப். பின்னர் பிரிட்ஜ் ஒன்றை புதிதாக வாங்கி வந்து ஷ்ரத்தாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி தினமும் அதிகாலையில் உடல் பாகங்களை டெல்லியின் பல பகுதிகளில் வீசியுள்ளார். ஷ்ரத்தா உயிருடன் இருப்பது போலவே அவரது செல்போன் மூலம் நண்பர்களிடம் மெயிண்டெய்ன் செய்து வந்துள்ளார்.
கொலை செய்து காதலி உயிருடன் இருப்பது போலவே நாடகமாடிய காதலன்
நண்பர்கள் சந்தேகத்தின் பேரில் ஷ்ரத்தாவின் அப்பாவிடம் தெரிவிக்க அவர் சந்தேகத்தின் பேரில் வந்து பார்த்து மகள் காணாமல் போனதை போலீசுக்கு தெரிவிக்க போலீஸ் அப்தாப்பை பிடித்து கைது செய்தனர். இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த கொலையில் தற்போது திடீர் திருப்பமாக தன்னை அப்தாப் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் பாதுகாப்பு கேட்டு எவர் ஷைன் சிட்டி போலீசுக்கு ஷ்ரத்தா எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. இதை நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டே கொலை செய்வதாக மிரட்டிய காதலன்
இந்த கடிதம் தற்போது வழக்கில் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டே கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக கடிதம் எழுதியுள்ளார். த்ன்னை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசுவேன் என மிரட்டியுள்ளதாக கூறியுள்ள கங்கனா, பின்னர் அந்தப்பெண்ணை அப்தாப் தனிமைப்படுத்தி டெல்லிக்கு அழைத்துச் சென்று தன் காரியத்தை நிறைவேற்றி விட்டார் என் பதிவிட்டுள்ளார்.
கங்கனா ரனாவத் கடிதம் எழுப்பிய புதிய புயல்
"ஷ்ரத்தா பலகீனமான பெண் அல்ல, எல்லா பெண்களுக்கும் இருக்கும் பலகீனம் தான் அவளை வீழ்த்தியது. திருமண ஆசை எனும் வலையில் வீழ்த்தியுள்ளார்கள். ஷ்ரத்தா தாய்மை உணர்வு கொண்டவள், அவர் காதலை நம்பினால் எப்படியும் மாற்றிவிடலாம் என அந்த நபருடன் போராடினாள்" என பதிவிட்டுள்ளார். கங்கனாவின் பதிவு மூலம் மும்பை போலீஸ் ஷ்ராவத் கடிதத்தில் புகாரை பெற்றப்பின் என்ன செய்தார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.