Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டிமாண்டி காலனி படத்தின் கதை என்ன?
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு காலனியில் பல வருடங்களாக பேய் இருப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இதனை மையமாக வைத்து டிமாண்டி காலனி படத்தை உருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் அஜய் ஞானதாஸ்.
நடிகர் அருள்நிதி மற்றும் அவரது நண்பர்கள் டிமாண்டி காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க வரும் போது அங்கு நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
சிங்கம் புலி,மதுமிதா, சூது கவ்வும் ரமேஷ் திலக், சனத் மற்றும் அபிஷேக் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஹீரோயின் கிடையாது.
சிரிப்பு பேய் இல்ல சீரியஸ் பேய்
இப்போது வரும் அனைத்து பேய் படங்களும் காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் வேளையில் இந்தப் படம் சீரியஸ் பேய் படமாம்.
யாவரும் நலம்,ஈரம் வரிசையில்
மாதவன் நடித்த யாவரும் நலம் ஆதி நடித்த ஈரம் படங்கள் போல இந்தப் படம் செம திகில் படமாக இருக்குமாம்.
பேயாக மாறும் ஹீரோ
பேய்களின் அட்டகாசத்தால் பாதிக்கப் படும் அருள்நிதி ஒரு கட்டத்தில் பேயாக மாறி எல்லோரையும் பயமுறுத்த அதற்கு பின் என்ன என்பது கிளைமாக்ஸ்.
இசையமைப்பாளர்கள்
இசையமைப்பாளர் கெபா ஜெரிமியா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் டம்மி பீசு பாடலை இசையமைப்பாளர் டி.இமானும், வாடா வா மச்சி பாடலை கொலைவெறி புகழ் அனிருத்தும் பாடியுள்ளனர்.
ஜெயிப்பாரா
அருள்நிதி பேயாக சாரி ஹீரோவாக ஜெயிப்பாரா ..முடிவு இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்..