Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திரைத் துளி
நடிக்க ஒப்புக் கொண்டு அட்வான்ஸும் வாங்கிக் கொண்டு நடிக்க மறுத்ததால் வடிவேலுவுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.
இதேபோல, ட்ரீம்ஸ் படத்தை தனுஷ் முடித்துக் கொடுக்காமல், சுள்ளான் படத்தை திரையிட விடுவதில்லை என்று அவருக்கும் தடை விதிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
மறைந்த படத் தயாப்பாளர் ஜீ.வியின் படத்தில் நடிக்க நடிகர் வடிவேலு ரூ. 2 லட்சம் அட்வான்ஸ் வாங்கியிருந்தார். ஜீ.வி. மறைவினால் அந்தப் படம் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தருமாறு வடிவேலுவை ஜீ.வி. குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர்.
இந்தா தர்றேன், அந்தா தர்றேன் என்று இழுத்தடித்த வடிவேலு கடைசி வரை பணத்தைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நொந்து போன ஜீ.வி. குடும்பத்தினர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதேபோல, மதனகோபால் என்ற தயாப்பாளரிடம் வடிவேலு ரூ. 1 லட்சம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு திருப்பித் தரவில்லை என்று தெரிகிறது. அவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.
இரு புகார்களையும் விசாரித்த தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதற்கு முன் தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று வடிவேலுவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் புதிய படங்களில் வடிவேலு நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதேபோல,நநிடிகர் தனுஷ் நடித்துள்ள சுள்ளான் படத்தை தடை செய்யவும் சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ட்ரீம்ஸ் படத்தில் நடிப்பதாக கூறி விட்டு பின்னர் மறுத்ததால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தை அணுகினர்.
பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இந் நிலையில் பாலு மகேந்திராவின் ஒரு கனாக்காலம், தேவதையைக் கண்டேன் என சில படங்களில் புக் ஆன தனுஷ் அவற்றை ஒதுக்கி விட்டு சுள்ளான் படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார். தற்போது படம் முடிவடைந்து ரிலீஸுக்கும் தயாராகி விட்டது.
ஆனால், சமரச திட்டத்தில் ஒப்புக் கொண்டபடி ட்ரீம்ஸ் படத்தில் நடித்து முடித்து விட்டுத்தான் தனுசின் சுள்ளான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ட்ரீம்ஸ் தயாரிப்பாளர்கள் தற்போது தனுஷை நெருக்கி வருகின்றனர்.
இதற்கு தனுஷ் ஒப்புக் கொள்ளாவிட்டால் அவரது படத்திற்கு தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்தின் உதவியை நாடப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.