‘ஆப்போனன்டா ஆளே இல்ல.. பிப்ரவரியில் சோலோ புள்ள".. இது தனுஷ்!

சென்னை: அனேகன் மற்றும் ஷமிதாப் என பிப்ரவரி மாதம் தனுஷின் இரண்டு படங்கள் ரிலீசாக உள்ளன. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் , அமைரா தஸ்தூர் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘அனேகன்'. ஹாரிஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் இணையம் , ஐடியூன், டிவி என ஹிட்டடித்துள்ளது. அதிலும் குறிப்பாக ‘டங்காமாரி' பாடல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வரும் பிப்ரவரி 13ம் தேதி ரிலீசாக உள்ளது.

Dhanush awaits two releases in February

இதேபோல் பால்கி இயக்கத்தில் அமிதாப், தனுஷ் , அக்‌ஷரா ஹாசன், நடிப்பில் உருவாகி வரும் ‘ ஷமிதாப்' படமும் பிப்ரவரியில் ரிலீசாகிறது.

'அனேகன்' படத்தை அடுத்த அடுத்த லெவல் கொண்ட காதல் என ஒரு வீடியோ கேம் போல் அமைத்துள்ளாராம் கே.வி.ஆனந்த். அதே போல் 'ஷமிதாப்' இரு சினிமா கலைஞர்களுக்குள் உள்ள நட்பு மற்றும் ஈகோ பிரச்னையை சொல்ல போகிறது.

இந்த இருபடங்கள் தவிர பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாரி திரைப்படமும் இந்த வருட இறுதிக்குள் ரிலீஸாகிவிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

எனவே, 2015-ஆம் ஆண்டிற்கான பல விருதுகளையும் தட்டிச் செல்லப்போகும் நடிகர் தனுஷ் தான் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அனேகன் படத்தில் வரும் டங்காமாரி பாடலில், ‘ஆப்போனன்டா ஆளே இல்ல சோலோ ஆகிட்டேன்' என வரிகள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்வரிகள் தனுஷுக்காகவே எழுதப்பட்டது என நிரூபிக்கும் வகையில் எந்த படங்களுடனும் போட்டி இல்லாமல் ஷமிதாப், அனேகன் ஆகிய படங்கள் சோலோவாக ரிலீஸ் செய்யப்படுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X