Don't Miss!
- News மருதாணி இலை.. கையில் ஹென்னா போட்டிருந்தால், ஓட்டுப்போட முடியாதா? சென்னை, திருவள்ளூரில் திடீர் பரபர
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தனுஷ் வழக்கை மேலூர் நீதிமன்றம் விசாரிக்க மதுரை ஹைகோர்ட் தடை
மதுரை: தனுஷ் தொடர்பான வழக்கை மேலூர் நீதிமன்றம் விசாரிக்க தடை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கூறி மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அவர் நேற்று முன்தினம் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தனுஷின் அங்க அடையாளங்களை பரிசோதித்த மருத்துவர் அறிக்கை தாக்கல் செய்தார்.
தனுஷ் தொடர்பான வழக்கை மேலூர் நீதிமன்றம் விசாரிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. மேலும் உயர் நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கில் உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கதிரேசனின் மனு உள்பட தனுஷ் சம்பந்தப்பட்ட அனைத்து மனுக்களின் விசாரண மார்ச் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.