Don't Miss!
- News
"வரி குறைப்பு வரவேற்க கூடியதுதான்.." பட்ஜெட் குறித்து எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து
- Sports
"இன்னும் ஒரே ஒரு போட்டிதான்.. சுப்மன் கில்லால் இந்தியாவுக்கு ஆபத்து".. பாக். சீனியர் எச்சரிக்கை!
- Finance
பட்ஜெட் 2023: உங்க சம்பளத்துக்கு வரிச் சேமிப்பு எவ்வளவு..? புட்டு புட்டு வைக்கும் தகவல்..!
- Lifestyle
தாய்மார்களே! உங்க குழந்தைக்கு பாலோடு இந்த பழங்களை சேர்த்து சாப்பிட கொடுக்கவே கூடாதாம்..ஏன் தெரியுமா?
- Automobiles
சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தனுஷ் ஸ்கெட்ச்சில் சிக்கிய எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால்... எல்லாத்துக்கும் காரணம் இதுதானா?
சென்னை: கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக கலக்கி வரும் தனுஷ், 2017ல் பவர் பாண்டி திரைப்படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.
ராஜ்கிரன், ரேவதி, பிரசன்னா ஆகியோர் நடிப்பில் ரிலீஸான பவர் பாண்டி படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் திரைப்படம் இயக்கும் முயற்சியில் உள்ளார் நடிகர் தனுஷ்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித்
ஸ்கெட்ச்சில்
சிக்கிய
தனுஷ்...
விக்னேஷ்
சிவனின்
புது
கணக்கு...
செட்டாச்சுன்னா
தெறிமாஸ்
தான்

இயக்குநரான தனுஷ்
கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான தனுஷ், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் ஜானரில் பீரியட் திரைப்படமாக உருவாகும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனுஷ் மீண்டும் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017ம் ஆண்டு பவர் பாண்டி என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருந்தார் தனுஷ். ராஜ்கிரன், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் ஆகியோருடன் படத்தை இயக்கிய தனுஷும் முக்கியமான பாத்திரத்தில் நடித்திந்தார். பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், ராஜ்கிரன் - ரேவதி இருவரின் காதலை பின்னணியாக வைத்து உருவாகியிருந்தது.

இரண்டாவது படம் இயக்க முடிவு
இந்நிலையில், தனது 2வது படத்தை இயக்க தனுஷ் ரெடியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாகவே இரண்டாவது படத்திற்கான கதையை எழுதி வந்த தனுஷ், தற்போது அதனை முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் தனுஷ் இயக்கவுள்ள அவரது இரண்டாவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பவர் பாண்டி படம் போல இல்லாமல் பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் பற்றியும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

முதன்முறையாக எஸ்ஜே சூர்யா
தனுஷ் இயக்கவுள்ள இந்தப் படத்தில் வில்லன் பாத்திரம் செம்ம வெரைட்டியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால், அதில் எஸ்ஜே சூர்யாவை நடிக்க வைக்க தனுஷ் முடிவு செய்துள்ளாராம். அதன்படி எஸ்ஜே சூர்யாவுடன் தனுஷ் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தக் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ள எஸ்ஜே சூர்யா, ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல் ஜிகர்தண்டா 2 உட்பட மேலும் பல படங்களில் கமிட் ஆகியுள்ள எஸ்ஜே சூர்யா, தனுஷ் படத்திலும் நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லால் சலாம் பட ஹீரோ
தனுஷ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் இதில், விஷ்ணு விஷால் கேரக்டர் சூப்பராக இருக்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரம், விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படங்களில் நடிக்கவுள்ள விஷ்ணு விஷால் அவரது கேரியரில் மிகப் பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். இந்நிலையில், தனுஷ் - எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால் இணையும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.