Don't Miss!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- News சென்னையை விடுங்க! சர்ரென முன்னேறிய தூத்துக்குடி, பெரம்பலூர், ராணிப்பேட்டை! உலகமே திரும்பி பார்க்குதே
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சந்தானம் இடத்தைக் கைப்பற்றிய சிபிராஜ்!
சென்னை: தந்தை மரணத்தால் தனது தில்லுக்கு துட்டு படத்தின் வெளியீட்டுத் தேதியை நடிகர் சந்தானம் தள்ளி வைத்திருக்கிறார்.
காமெடி நடிகராகத் திரைப்பயணத்தைத் தொடங்கிய சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் தில்லுக்கு துட்டு படத்தை ஜூலை மாதம் வெளியிட முடிவு செய்திருந்தனர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம்(69) மரணமடைந்ததால், தற்போது தில்லுக்கு துட்டு படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போயிருக்கிறது.
இதனால் அப்படத்தை வாங்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதே தேதியில், சிபிராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜாக்சன் துரையை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
இப்படத்தின் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சந்தானம் இருக்கிறார். எனினும் தந்தை இழப்பிலிருந்து இன்னும் அவர் மீளவில்லை என்பதால் தில்லுக்கு துட்டு படத்தின் வெளியீட்டுத் தேதி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.