Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மூன்று நாட்களில் ரூ 66 கோடியை அள்ளியது டோணி.. தமிழிலும் நல்ல வரவேற்பு!
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - அன் அன்டோல்ட் ஸ்டோரி. டோணி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே. இந்தப் படம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.
60 நாடுகளில், 4500 திரையரங்குகளில் வெளியான தோனி படம், முதல் நாளன்று ரூ. 21 கோடியை வசூலித்தது. வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் அதிக முதல் நாள் வசூல் டோணி படத்துக்குத்தான் கிடைத்துள்ளது.
சனி, ஞாயிறில் டோணி படத்தின் வசூல் இன்னும் அதிகமாகியுள்ளது. சனியன்று ரூ. 20.60 கோடியும் ஞாயிறன்று ரூ. 24.10 கோடியும் வசூலித்து சாதனை செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் மூன்று நாள்களில், ரூ. 66 கோடியை வசூலித்து நூறு கோடி ரூபாய் வசூலை நோக்கி வெற்றிநடை போடுகிறது.
தமிழகத்திலும்...
தமிழ்நாட்டிலும் தோனி படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்பதாலும் தோனி மீது ரசிகர்கள் உணர்வுபூர்வமான பந்தம் கொண்டுள்ளதால், இந்தப் படத்துக்குத் தமிழ்நாட்டிலும் ஒரு தமிழ்ப் படத்துக்கு இணையான வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது.
தமிழில் 205, ஹிந்தியில் 27 என தமிழ்நாட்டில் இந்தப் படம் 232 திரையரங்குகளில் வெளியாகி, முதல் மூன்று நாள்களில் மட்டும் ரூ. 7 கோடி வசூலித்துள்ளது. மேலும் கூடுதல் திரையரங்குகளில் இந்தப் படத்தைத் திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன.