Don't Miss!
- Finance 1 கிலோ காளான் ரூ. 1.5 லட்சமா.. சமைச்ச வீடே மணக்கும்..என்னனு பாருங்க!
- Lifestyle காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- News தமிழ்நாட்டில் நாளை வாக்குப் பதிவு... இப்படியும் 20 கட்சிகள் களத்தில் இருப்பது தெரியுமா?
- Automobiles ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ பாடல் காப்பியடிக்கப்பட்டதா?
லைப் ஆப் பை படத்தில் பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ எழுதிய தாலாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்படத்தை பார்த்த கேரள மக்கள் ஜெயஸ்ரீ எழுதிய தாலாட்டு ஓமனத்திங்கள் கெடாவோ என்ற பிரபல மலையாள தாலாட்டு போன்றே உள்ளது என்று தெரிவித்தனர். ஓமனத்திங்கள் கெடாவோ என்ற பாடல் 18வது நூற்றாண்டில் இறையிம்மன் தம்பி என்பவரால் எழுதப்பட்ட தாலாட்டாகும்.
கேரளத்து மக்களில் இத்தாலாட்டை கேட்டிராதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு இன்றும் பிரபலமாக உள்ள தாலாட்டு பாடல் ஆகும். இந்நிலையில் தம்பியின் வம்சத்தைச் சேர்ந்தவரும், தம்பி அறக்கட்டளை செயலாளருமான ருக்மிணி பாய் கூறுகையில்,
ஜெயஸ்ரீ தம்பியின் பாடலை காப்பியடித்துள்ளார். அவர் எங்களிடம் அனுமதி பெறவே இல்லை. நஷ்ட ஈடு கேட்டு அவர் மீது வழக்கு தொடர்வோம். அவர் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
ஜெயஸ்ரீ எழுதி பாடியுள்ள பாட்டில் முதல் 8 வரிகள் தம்பியின் தாலாட்டில் வருவது போன்றே உள்ளது. ஆனால் தன் மனதில் பட்டதை பாட்டாக எழுதியதாக ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.