பார்ட்டியில் வாரிசு நடிகரை பார்த்து ஜொள்ளுவிட்டு அலைந்தாரா என் மகள்?: ஸ்ரீதேவி விளக்கம்
மும்பை: கரண் ஜோஹார் பார்ட்டியில் ஜான்வி நடிகர் ரன்பிர் கபூர் பின்னால் சென்றது குறித்து நடிகை ஸ்ரீதேவி விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹாரின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கலந்து கொண்டார். பார்ட்டியில் அவர் நடிகர் ரன்பிர் கபூர் பின்னாலேயே சென்றதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து ஸ்ரீதேவி கூறியிருப்பதாவது,

ஜான்வி
பார்ட்டியில் ரன்பிர் பின்னாலேயே தான் சென்றதாக பலரும் பேசியதை கேட்டு என் மகள் ஜான்வி கவலை அடைந்தார். மம்மி, பார்டியில் நான் இயக்குனர் கவுரி ஷின்டே ஆன்ட்டியுடன் தான் இருந்தேன் என்று என்னிடம் கூறினார்.

வா மகளே
ஜான்வியின் விளக்கத்தை கேட்ட நான் இது தான் என் உலகம், வா மகளே என்றேன். சினிமா உலகில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் இதை எல்லாம் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று நான் அவரிடம் தெரிவித்தேன் என்றார் ஸ்ரீதேவி.

ரன்பிர்
பார்ட்டியில் ரன்பிர் கபூர் ஜான்வியை பார்த்து ஹாய் சொன்னாராம். உடனே ஜான்விக்கு வெட்கத்தால் முகம் சிவந்து அவர் செல்லும் இடத்திற்கு எல்லாம் பின்னாலேயே சென்றதாக பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் பேசியுள்ளனர்.

கடுப்பு
ஜான்வி தன் பின்னாலேயே வந்ததை பார்த்து ரன்பிர் கபூர் கடுப்பானதாகவும், அவரை கண்டுகொள்ளாமல் பிறருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications