Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
டைரக்டருடன் கோயிலில் மாலையும் கழுத்துமாக நின்ற மீரா மிதுன்...அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை : சர்ச்சை நாயகி மீரா மிதுன், இயக்குநர் ஒருவருடன் சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் மாலை மாற்றி கொண்டதாக வெளியான போட்டோவால் கோலிவுட்டே பரபரத்து போய் உள்ளது.
அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகையும், மாடலுமான மீரா மிதுன் எது செய்தாலும், அதனை கழுவி ஊற்றுவதற்கு என்று சமூக வலைத்தளத்தில் ஒரு கூட்டம் உள்ளது. அதற்கு ஏற்றார் போல் தான் மீரா மிதுனும் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சி முலம் பிரபலமான மீரா மிதுன், படங்களில் சிலவற்றில் நடித்து வருகிறார்.
இந்த சமயத்தில் தனக்கு வரும் பட வாய்ப்புகளை சூர்யா, விஜய் போன்ற வாரிசு நடிகர்கள் கெடுப்பதாக, வீடியோ வெளியிட்டு கதறியது மட்டும் இன்றி, பெரிய நடிகர் பலர் பற்றியும் பேசி வம்பில் மாட்டிக் கொண்டார். ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டு பின்னர் மன்னிப்பு கேட்டார். பின்னர் பட்டியலினத்தவர்கள் பற்றி அவதூறாக பேசியதால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் கொஞ்சம் அடங்கி போயுள்ள மீரா. அவ்வப்போது, ஆல்பம் சாங் எடுக்கிறேன் என்கிற பெயரில் கவர்ச்சி அட்ராசிட்டி செய்து வருகிறார்.மேலும் இவர், இயக்குநர் அன்பரசன் என்பவர் இயக்கி வரும் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமான 'பேய காணோம்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஒரு பேய், மற்றொரு பேய காணவில்லை என்று புகார் கொடுக்கும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது. கவுசிக் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், மீரா மிதுன் தான் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் தருண் கோபி, கோதண்டம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கார்த்தி படத்துல நடிக்க கிடைத்த வில்லன் சான்ஸ்.. நோ சொன்ன விஜய் சேதுபதி.. என்ன பிரச்சினை?
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கூட, மீரா மிதுனுக்கும், காமெடி நடிகர் கோதண்டத்திற்கும்,இடையே பிரச்சனை வந்தது. அதே போல் படப்பிடிப்பு முடியும் முன்னரே இவர் இரவோடு இரவாக சென்று விட்டார் என படக்குழுவினர் குற்றம்சாட்டி இருந்தனர்.பிறகு மீரா மிதுனுக்கு பதிலாக டூப் போட்டு மீதமுள்ள படத்தை முடித்ததாக கூறப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது மீரா மிதுன் 'பேய காணும்' படத்தின் இயக்குநர் அன்பரசனுடன் நேற்று மாலை மாற்றிக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட போட்டோக்கள் வெளியாகி உள்ளன.இது ஒரு புறம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும், மற்றொரு புறம், படத்தின் ப்ரொமோஷனுக்காக தான் இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள் என கூறி வருகின்றனர்.