அந்த வீடு தான் வேணும்...நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை பெரிய தொகை கொடுத்து வாங்கிய சமந்தா
ஐதராபாத் : நடிகை சமந்தாவும் - நாக சைதன்யாவும் 2017 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான்கு ஆண்டு திருமண வாழ்க்கை நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாங்கள் பிரிய போவாக சோஷியல் மீடியாவில் அறிவித்தனர்.
இருவரும் பிரிவதாக அறிவித்த பிறகு, சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்கள் பற்றிய ஒவ்வொரு தகவலும் இணையத்தில் தீயாய் பரவி, உடனடியாக டிரெண்டாகி விடுகிறது.
கணவர் நாக சைதவ்யாவை பிரிந்த பிறகு சமந்தாவும் கிளாமர் தூக்கலான போட்டோக்களை அதிகம் வெளியிட்டு வருகிறார். புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு படு கவர்ச்சியாக நடனமாடி வேர்ல்டு ஃபேமஸ் ஆகி விட்டார். இதனால் தற்போது பாலிவுட்டிலும் இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

அதிக விலை கொடுத்து சமந்தா வாங்கிய வீடு
இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான முரளி மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சமந்தா பற்றி பேசி இருந்தார். அதில், சமந்தா தற்போது வீடு ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளார். நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு இருவரும் சேர்ந்து வீடு ஒன்றை வாங்கினார்கள். திருமணமான புதிதில் இந்த வீட்டில் தான் இருவரும் வாழ்ந்து வந்தனர்.

எனக்கு அந்த வீடு தான் வேணும்
பிறகு பிரிவை அறிவித்ததும், இந்த வீட்டை விற்று விட்டு, தனியாக வீடு வாங்கி இருவரும் தனித்தனியாக வாழ துவங்கி விட்டவனர். சினிமாவில் பிஸியாக நடித்து வரும் சமந்தா, தற்போது அதே வீட்டை மீண்டும் அதிகமான தொகை கொடுத்து வாங்கி உள்ளார். எவ்வளவு விலையாக இருந்தாலும் தனக்கு அந்த வீடு தான் வேண்டும் என பிடிவாதமாக சமந்தா வாங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிறகு பிரிவை அறிவித்ததும், இந்த வீட்டை விற்கு விட்டு, தனியாக வீடு வாங்கி இருவரும் தனித்தனியாக வாழ துவங்கி விட்டவனர். சினிமாவில் பிஸியாக நடித்து வரும் சமந்தா, தற்போது அதே வீட்டை மீண்டும் அதிகமான தொகை கொடுத்து வாங்கி உள்ளார். எவ்வளவு விலையாக இருந்தாலும் தனக்கு அந்த வீடு தான் வேண்டும் என பிடிவாதமாக சமந்தா வாங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாக சைதன்யாவை மிஸ் பண்றாரா சமந்தா
நாக சைதன்யாவுடன் தான் வாழ்ந்த அதே வீட்டில் வாழ விரும்புகிறார் சமந்தா. தற்போது இந்த வீட்டை வாங்கி, அதில் தனது அம்மாவுடன் சமந்தா வசித்து வருகிறார் என முரளி மோகன் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட பலரும், நாக சைதன்யா மீது சமந்தாவிற்கு இவ்வளவு லவ்வா...சமந்தா அவரை ரொம்ப மிஸ் பண்ணுறார் போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் என்ன
நாகசைதன்யாவின் சமீபத்திய சோஷியல் மீடியா பதிவுகளும் அவரும் சமந்தாவை மிஸ் பண்ணுகிறாரோ என்ற சந்தேகத்தை தான் ரசிகர்களிடம் எழுப்பி இருந்தது. தற்போது சமந்தாவும் இவ்வாறு செய்துள்ளதால், இருவரும் மீண்டும் ஒன்று சேர்வது பற்றி ஏன் சிந்திக்கக் கூடாது என பலரும் அட்வைஸ் வழங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications