Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அதிரடி முடிவு எடுத்துடுச்சி அம்மா... நடிகர் சங்கம் இன்னும் ஏன் இருக்கு சும்மா?
பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பை அதிரடியாக நீக்கிவிட்டது மலையாள நடிகர் சங்கமான அம்மா. தவறு செய்தவர்கள் தங்கள் துறையில் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் ஆதரவு தரமாட்டோம் என்பதை பளிச்சென்று காட்டிவிட்டனர் கேரள திரையுலகினர். இத்தனைக்கும் அந்தக் கூட்டத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் இருவருமே கலந்து கொண்டனர். மம்முட்டி வீட்டில்தான் கூட்டமே நடந்தது குறிப்பிடத்தக்கது.
நீக்கப்பட்ட திலீப் நடிகர் மட்டுமல்ல... அம்மா அமைப்பின் பொருளாளர். தங்கள் பொருளாளரையே ஜஸ்ட் லைக் தட் தூக்கி எறிந்துவிட்டது அம்மா. ஆனால் இன்னமும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை தமிழகத்தில் இயங்கும் தென்னிந்திய நடிகர் சங்கம். நடிகர் திலீப் தமிழில் வெளியான ராஜ்ஜியம் படத்தில் விஜயகாந்தின் தம்பியாக நடித்துள்ளார். ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை.
பாதிக்கப்பட்ட பாவனா நடிகர் சங்கத்தின் முழுமையான உறுப்பினர். பாவனா விவகாரம் வெளியில் வந்த போது பாவனாவுக்கு ஆதரவாக அறிக்கை விட்டது நடிகர் சங்கம். சங்கத்தின் செயலாளர் விஷாலும், பாவனாவுக்கு அனைத்து வகையிலும் உதவுவதாகத் தெரிவித்திருந்தார்.
இப்போது நடிகர் சங்கத்தின் உறுப்பினரான பாவனா பாதிக்கப்பட்டது வெளியாட்களால் அல்ல... திரைத்துறையின் முதன்மையான கலைஞர்களுள் ஒருவரான திலீப் மூலம்தான் என்று தெரிந்துவிட்டது.
இதுகுறித்து நடிகர் சங்கம் என்ன கூறப் போகிறது? குறைந்தபட்சம் திலீப்புக்கு கண்டனமாவது தெரிவிக்குமா?