Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கேரள நடிகர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்... 'அம்மா' சங்கக் கூட்டத்தில் அதிரடி முடிவு!
திட்டம் போட்டு பாவனாவைக் கடத்தி மானபங்கம் செய்த வழக்கில் கைதாகியுள்ள திலீப்பை மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து நீக்கி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டது கேரள திரையுலகை உலுக்கியுள்ளது. திலீப் கைது செய்யப்பட்ட உடனே மலையாள நடிகர் சங்கமான அம்மா அவசர கூட்டம் நடத்தியது. கொச்சியில் உள்ள நடிகர் மம்முட்டியின் வீட்டில் இந்த அவசரக் கூட்டம் நடந்தது. இந்த சங்கத்தின் பொருளாளராக உள்ளார் நடிகர் திலீப்.
திலீப்புக்கு ஆதரவாகவும் பாவனாவுக்கு எதிராகவும் சில மலையாள நடிகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு அம்மா கடும் கண்டனம் தெரிவித்தது.
முறையான விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளியைக் கைது செய்த கேரள அரசுக்கும் போலீசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அம்மா அமைப்பிலிருந்து நடிகர் திலீப் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் நடிகர் மோகன் லால், மம்முட்டி, ரம்யா நம்பீசன், தேவன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கூட்டத்துக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அம்மா பொதுச் செயலாளரான மம்முட்டி மேற்கொண்டு எதையும் பேச மறுத்துவிட்டார்.