Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இதுவரை 15 முறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்!! - திலீப், காவ்யா மாதவன்
இதுவரை எங்களுக்கு 15 முறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் மீடியாவில் என நடிகர் திலீப்பும், காவ்யா மாதவனும் தெரிவித்துள்ளனர்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப். பிரபல நடிகை மஞ்சு வாரியரை காதல் திருமணம் செய்தார். இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து விவாகரத்து பெற்று பிரிந்தனர் இருவரும்.
காவ்யாதான் காரணமா?
இந்த விவாகரத்துக்கு காரணம் நடிகை காவ்யா மாதவனுடன் நடிகர் திலீப்புக்கு ஏற்பட்ட தொடர்புதான் என்றும், இருவரும் சேர்ந்தே இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை இருவரும் மறுத்தனர்.
திருமணம்
இந்தநிலையில் காவ்யா மாதவனை வருகிற 16-ந்தேதி குருவாயூர் கோவிலில் வைத்து நடிகர் திலீப் திருமணம் செய்ய இருக்கிறார் தகவல் பரவியது.
இந்த முறையும் தனது மறுப்பை திலீப் தெரிவித்துள்ளார்.
15 முறை
அவர் கூறுகையில், "கடந்த ஓராண்டில் மட்டும் 15 முறை எனக்கும் காவ்யா மாதவனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் மீடியாவில். எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று தோன்றினால், அதை நானே உங்களுக்கு தெரிவிப்பேன். இப்போது வெளியாகி இருக்கும் தகவல் புரளி. அதில் எந்த உண்மையும் இல்லை," என்றார்.
புரளி
இதுகுறித்து காவ்யா மாதவன் கூறுகையில், " இந்த தகவலில் உண்மை இல்லை. அது வெறும் புரளி. எனது வாழ்க்கையில் ஏதாவது நல்ல தருணங்கள் ஏற்பட்டால் அதை நானே உங்களுக்கு தெரிவிக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுங்கள்," என்றார்.