Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் திலீப் குமாரின் வீட்டை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவித்த பாகிஸ்தான் அரசு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள இந்தி நடிகர் திலீப் குமாரின் வீட்டை அந்நாட்டு அரசு தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
இந்தி நடிகர் திலீப் குமாரின் இயற்பெயர் யூசுப் கான். 91 வயதாகும் அவர் பாகிஸ்தானில் உள்ள கைபர் படுங்க்வா மாகாணத்தில் பிறந்தவர். அவருடைய பூர்வீக வீடு பெஷாவரில் உள்ளது. திலீப் குமார் இந்தியாவில் வசித்து வருவதால் அவரது பூர்வீக வீடு பராமரிப்பு இன்றி கிடந்தது.
இந்நிலையில் திலீப்பின் வீட்டை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கைபர் படுங்க்வா மாகாண அரசு நவாஸ் ஷெரீஃப் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அந்த வீட்டை தேசிய பாரம்பரிய சின்னமாக்கினால் இந்தியா, பாகிஸ்தான் மக்களிடையேயான உறவை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்று மாகாண அரசு தெரிவித்திருந்தது.
மாகாண அரசின் கோரிக்கையை ஏற்று திலீப் குமாரின் வீட்டை தேசிய பாரம்பரிய சின்னமாக மாற்றுமாறு நவாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான கலாச்சார உறவை மேம்படுத்த விரும்புகிறாராம் ஷெரீஃப். அவர் தனது இந்திய பயணத்தின்போது பாலிவுட் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?