Don't Miss!
- News அந்த ஜூஸ், மோர் தான் காரணமா? மயக்கம், நெஞ்சு வலி.. விஷ முறிவு மருந்து எடுத்துக்கொண்ட மன்சூர் அலிகான்
- Finance மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு.. அதுவும் எலான் மஸ்க் இந்தியா வரும் நேரத்தில்.. வாவ்..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கேவலமாக விமர்சிக்கப்பட்டும் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த தில்வாலே
மும்பை: ஷாருக்கான், கஜோல் நடித்த தில்வாலே படம் ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், கஜோல் நடித்த தில்வாலே படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸானது. அதே நாளில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடித்த பாஜிராவ் மஸ்தானி படமும் வெளியானது.
பாக்ஸ் ஆபீஸில் பாஜிராவ் மஸ்தானியை தில்வாலே முந்தியுள்ளது.
தில்வாலே
தில்வாலே படத்தை பார்த்த விமர்சகர்கள் அதை திட்டித் தீர்த்து, துப்பாத குறையாக விமர்சனம் எழுதியிருந்தனர். தில்வாலே படத்தை பார்த்தால் உங்களுக்கு மாரடைப்பு வரும், அப்புறம் மர்டாலே தான் என்றெல்லாம் விமர்சனம் வெளியானது.
ரசிகர்கள்
தில்வாலே படத்திற்கு இவ்வளவு கேவலமான விமர்சனம் வெளியாகியும் ரசிகர்கள் மட்டும் அதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை. நீங்கள் பாட்டுக்கு விமர்சியுங்கள், நாங்கள் பாட்டுக்கு தியேட்டருக்கு சென்று படத்தை ஹிட்டாக்குவோம் என்ற முடிவில் உள்ளனர்.
ரூ.100 கோடி
தில்வாலே ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் பாக்ஸ் ஆபீஸில் ரூ.121 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.65.09 கோடியும், வெளிநாடுகளில் ரூ.56 கோடியும் வசூலித்துள்ளது.
பாஜிராவ் மஸ்தானி
நிஜ வாழ்வில் காதலர்களான ரன்வீர் சிங், தீபிகா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள பாஜிராவ் மஸ்தானி படம் மூன்று நாட்களில் ரூ. 46.77 கோடி வசூலித்துள்ளது.