Just In
- 1 min ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 32 min ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 1 hr ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 2 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- Lifestyle
மைதா போண்டா
- News
உமாசங்கர் மரணத்தில் உள்ள மர்மம் என்ன...சிபிசிஐடி விசாரணை வேணும்...ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை
- Sports
பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.. பயிற்சி இல்லை.. தல மீது கோபத்தில் இருக்கும் சீனியர் தலைகள்!
- Automobiles
நிஜ பாகுபலியா? வறுமையின் அடையாளமா? தலையில் பைக்கை சுமந்தபடி பஸ்ஸின் மீது ஏறிய தொழிலாளி... வீடியோ
- Finance
பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வனயுத்தம் - இயக்குநர் கவுதமன், பழ நெடுமாறன் எதிர்ப்பு
இயக்குநர் ஏ எம்ஆர் ரமேஷ் தன்னைச் சந்திக்கவே இல்லை என்றும், வனயுத்தம் படம் ராஜ்குமார் குடும்பத்தை திருப்திப்படுத்த மட்டுமே எடுக்கப்படுகிறது என்றும் இயக்குநர் வ கவுதமன் கூறியுள்ளார்.
வீரப்பன் கதையை சந்தனக்காடு என்ற பெயரில் இயக்கியவர் கவுதமன். வனயுத்தம் விவகாரம் பற்றி அவர் கூறுகையில், "இந்தப் படம் கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்டுவரும் படம்.
அட்டகாசா என்ற பெயரில் கன்னடத்தில் தயாராகிறது. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது வீரப்பன் அவரை கொடூரமாக நடத்தியதுபோல படத்தில் காட்சிகள் வைத்துள்ளனர். ஆனால் வீரப்பன் ராஜ்குமாரை தனது தந்தையைபோல் நடத்தினார்.
உண்மை சம்பவங்களை படமாக்கும் போது அதில் பொய்யை புகுத்தக்கூடாது. வரலாற்றை திரித்து சொல்லக்கூடாது தமிழன் என்ற முறையில் இப்படத்தை நான் எதிர்க்கிறேன்.
என்னை சந்தித்து கதை விவாதம் நடத்தியதாக வனயுத்தம் படத்தின் டைரக்டர் ரமேஷ் கூறியிருப்பது பொய்யான தகவல்.
வீரப்பன் காலத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்களை கர்நாடக போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். பெண்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்துள்ளனர். இதையெல்லாம் வன யுத்தத்தில் காட்டும் துணிச்சல் உண்டா ரமேஷுக்கு?" என்றார்.
பழ நெடுமாறன்
ஏ எம் ஆர் ரமேஷ் தன்னைச் சந்தித்ததாகக் கூறுவது உண்மையல்ல என்றும், நிஜமான கதைகளை எடுக்கும்போது உண்மைக்கு மாறான காட்சிகளை வைக்கக் கூடாது என்று தமிழ் உணர்வாளர் பழ நெடுமாறன் கூறியுள்ளார்.