Don't Miss!
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வனயுத்தம் - இயக்குநர் கவுதமன், பழ நெடுமாறன் எதிர்ப்பு
இயக்குநர் ஏ எம்ஆர் ரமேஷ் தன்னைச் சந்திக்கவே இல்லை என்றும், வனயுத்தம் படம் ராஜ்குமார் குடும்பத்தை திருப்திப்படுத்த மட்டுமே எடுக்கப்படுகிறது என்றும் இயக்குநர் வ கவுதமன் கூறியுள்ளார்.
வீரப்பன் கதையை சந்தனக்காடு என்ற பெயரில் இயக்கியவர் கவுதமன். வனயுத்தம் விவகாரம் பற்றி அவர் கூறுகையில், "இந்தப் படம் கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்டுவரும் படம்.
அட்டகாசா என்ற பெயரில் கன்னடத்தில் தயாராகிறது. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது வீரப்பன் அவரை கொடூரமாக நடத்தியதுபோல படத்தில் காட்சிகள் வைத்துள்ளனர். ஆனால் வீரப்பன் ராஜ்குமாரை தனது தந்தையைபோல் நடத்தினார்.
உண்மை சம்பவங்களை படமாக்கும் போது அதில் பொய்யை புகுத்தக்கூடாது. வரலாற்றை திரித்து சொல்லக்கூடாது தமிழன் என்ற முறையில் இப்படத்தை நான் எதிர்க்கிறேன்.
என்னை சந்தித்து கதை விவாதம் நடத்தியதாக வனயுத்தம் படத்தின் டைரக்டர் ரமேஷ் கூறியிருப்பது பொய்யான தகவல்.
வீரப்பன் காலத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்களை கர்நாடக போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். பெண்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்துள்ளனர். இதையெல்லாம் வன யுத்தத்தில் காட்டும் துணிச்சல் உண்டா ரமேஷுக்கு?" என்றார்.
பழ நெடுமாறன்
ஏ எம் ஆர் ரமேஷ் தன்னைச் சந்தித்ததாகக் கூறுவது உண்மையல்ல என்றும், நிஜமான கதைகளை எடுக்கும்போது உண்மைக்கு மாறான காட்சிகளை வைக்கக் கூடாது என்று தமிழ் உணர்வாளர் பழ நெடுமாறன் கூறியுள்ளார்.
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி