Don't Miss!
- News
கலைஞரும் தமிழும் போல வாழுங்கள்..ஒபிஎஸ்-இபிஎஸ் போல வாழ்ந்து விடாதீர்கள்..மணமக்களுக்கு உதயநிதி அட்வைஸ்
- Lifestyle
சப்பாத்தி, பூரிக்கு சூப்பராக இருக்கும்... ஆலு பட்டர் மசாலா
- Sports
ஒரே போட்டியில் பல மாற்றங்கள்.. நியூசி, உடனான 3வது ODI போட்டி..ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா பலே திட்டம்
- Technology
விபூதி அடிக்கும் BharOS என்கிற "பாரத்" ஓஎஸ்? இந்த உண்மை தெரிஞ்சா.. கழுவி கழுவி ஊத்துவீங்க!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
சினிமாவை விட ரசிகர்களுக்கு உசுரு தான் முக்கியம்... எமோஷனலான லோகேஷ் கனகராஜ்
கோவை: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து விஜய் நடிப்பில் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது.
இந்நிலையில், கோவையில் வருமான வரித்துறை சார்பில் நடைபெற்ற இளம் தொழிலதிபர்களுக்கான விருது விழாவில் லோகேஷ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தளபதி 67 படத்தின் அப்டேட்டுடன் ரசிகர்களுக்கு முக்கியமான அட்வைஸ் ஒன்றையும் கூறியுள்ளார்.
Varisu
box
office
day
2:
அஜித்தின்
துணிவால்
வந்த
சோதனை...
திருப்பிக்கொடுத்த
விஜய்

கோவையில் லோகேஷ்
மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ், அதனைத் தொடர்ந்து இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களில் தரமான சம்பவம் செய்திருந்தார். நான்கு படங்களுமே மாஸ் ஹிட்டாக அமைந்ததுடன், பாக்ஸ் ஆபிஸிலும் தெறிக்கவிட்டன. இதன் தொடர்ச்சியாக அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். மாஸ்டரில் மரண மாஸ் காட்டிய அதே கூட்டணி, தளபதி 67 படத்திலும் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிபார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இந்நிலையில், கோவையில் நடைபெற்ற விருதுவிழாவில் லோகேஷ் கலந்துகொண்டார்.

ரசிகர்களுக்கு அட்வைஸ்
கோவையில் வருமான வரித்துறை சார்பில் நடைபெற்ற இளம் தொழிலதிபர்களுக்கான விருது விழாவில் பங்கேற்று பேசியிருந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ரசிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இது வெறும் சினிமா தான். உயிரை டும் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. சந்தோஷமாக படத்தை பார்த்துவிட்டு பத்திரமாக வீட்டிற்கு சென்றாலே போதும். உயிரே போகும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை என்பது தான் என் கருத்து" எனக் கூறியுள்ளார்.

துணிவு FDFS-ல் சோகம்
மேலும், வாரிசு படம் வெளியான பிறகு தான் தளபதியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதாக இருந்தோம். இனி 10 நாட்கள் கழித்து படம் தொடர்பான அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகும். தமிழகம் - தமிழ்நாடு என்ற விவாதம் குறித்து கேட்டதற்கு, அவர் தமிழ்நாடு என்றே அழைப்பேன் எனவும் கூறிவிட்டுச் சென்றார். ரசிகர்களுக்கு உயிர்தான் முக்கியம் என லோகேஷ் சொல்வதற்கு, துணிவு FDFS பார்க்கச் சென்ற ரசிகர் உயிரிழந்ததே காரணம் என சொல்லப்படுகிறது.

எல்லை மீறும் ரசிகர்கள்
அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் FDFS, பார்க்க ரோகிணி திரையரங்கம் சென்ற பரத்குமார் என்ற ரசிகர் விபத்தில் உயிரிழந்தார். சித்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் என்பவர் ரோகிணி தியேட்டர் முன்பு கண்டெய்னர் லாரியின் மேல் ஆடியபடி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவரது முதுகுத் தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து உயிரிழந்த பரத்குமாரின் நண்பர்களும் வேதனை தெரிவித்திருந்தனர். அதேபோல் அஜித்தின் பல அடி உயர கட்அவுட்டுக்கு கிரேனில் தொங்கியபடி ரசிகர் ஒருவர் மாலை போடும் வீடியோவும் இணையத்தில் வைரலானது. இதனை மனதில் வைத்தே லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.