Just In
- 32 min ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 53 min ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
- 1 hr ago
செண்டை மேளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. ரம்யா பாண்டியனின் வருகையை மாஸாக கொண்டாடிய குடும்பம்!
Don't Miss!
- News
அடுத்தடுத்து உயிரிழந்த நாட்டுக் கோழிகள்.. சேலம் அருகே பறவைக் காய்ச்சல் பரவலா? பீதியில் மக்கள்
- Sports
இங்கிலாந்துடன் மோத தயாராகும் இந்திய அணி... அணியை இன்று இறுதி செய்யும் தேர்வாளர்கள்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Finance
பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..!
- Automobiles
இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
29வது பிறந்தநாள் அன்று வீட்டில் பிணமாகக் கிடந்த பெண் இயக்குநர்
திருவனந்தபுரம்: மலையாள இயக்குநர் நயனா சூரியன் தன் வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கருநாகப்பள்ளியை சேர்ந்தவர் நயனா சூரியன்(29). அவர் வெள்ளையம்பாளையம் அருகே உள்ள அல்தரா ஜங்ஷன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.
அவர் பிரபல இயக்குநர் லெனின் ஜோசபிடம் உதவியாளராக இருந்து இயக்குநர் ஆனவர்.

பிறந்தநாள்
சனிக்கிழமை நயனாவின் 29வது பிறந்தநாள் ஆகும். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அவரின் தாய் போன் செய்தபோது நயனா எடுக்கவில்லை. இதையடுத்து அவர் நயனாவின் தோழிகளுக்கு போன் செய்து தனது மகளுக்கு போன் செய்தால் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வீடு
தோழிகளும் நயனாவுக்கு போன் செய்ய அவர் எடுக்கவில்லை. இதையடுத்து தோழிகள் ஞாயிற்றுக்கிழமை காலை நயனாவின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியபோது அவர் திறக்கவில்லை. இதையடுத்து வீட்டின் உரிமையாளரிடம் இருந்த மற்றொரு சாவியை வாங்கி கதவை திறந்து உள்ளே சென்றாால் படுக்கையறை உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

மரணம்
படுக்கை அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நயனா பிணமாகக் கிடந்தார். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நயனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நயனா சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறந்திருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சோகம்
லெனின் ஜோசப் கடந்த மாதம் 14ம் தேதி மரணம் அடைந்தார். அதில் இருந்து சோகத்தில் இருந்த நயனா சரியாக சாப்பிடவில்லையாம். சர்க்கரை நோய் இருந்த நிலையில் நயனா சாப்பிடாததால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்து அவர் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. லெனின் இறந்த 41வது நாள் நயனா இறந்துள்ளார்.

படம்
நயனா பல விளம்பர படங்களை இயக்கியதுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மேடை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். நயனா இயக்குநர்கள் டாக்டர் பிஜு, ஜிது ஜோசப் ஆகியோரிடமும் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அவர் இயக்கிய பக்ஷகளுடே மணம் படம் பாராட்டைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.