குழந்தைகளை பேச விடுங்கய்யா.. ஆசிரியர்களை அறிவுறுத்தும் சமுத்திரக்கனி!
குழந்தைகளை வகுப்பில் பேச அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர்களை இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி: குழந்தைகளை வகுப்பில் பேச அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர்களை இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆத்மாலயம் எனும் சிறப்பு குழந்தைகளுக்கான மூளை மற்றும் நரம்பு சம்மந்தமான பயிற்சி மையத்தை திரைப்பட இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி திறந்துவைத்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர்கள் மாணவர்களுடன் அமர்ந்து பேச வேண்டும் என்றும் மாணவர்கள் வகுப்பில் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் திரைப்பட இயக்குநர் சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.
அவர் இயக்கிய அப்பா படத்தில் மகனிடம் நட்பாக பழகும் அப்பாவாகவும் சாட்டை படத்தில் மாணவர்களிடம் நட்பாக பேசும் ஆசிரியராகவும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











