Just In
- 4 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 4 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 5 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 5 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
காஷ்மீரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே... தாயையும் சேயையும் 6 கி.மீ சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜோதிகாவைப் பற்றி பேசியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள்.. பிரபல இயக்குநர் நறுக்!
சென்னை: நடிகை ஜோதிகாவுக்கு எதிராக பேசியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டடார்கள் என இயக்குநர் சரவணன் தெரிவித்துள்ளார்.
அரசு இராச மிராசுதார் மருத்துவமனை தஞ்சை நகரின் மத்தியில் அமைந்துள்ளது. தற்போது இங்கு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவு மட்டும் செயல்பட்டு வருகிறது.
தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட ஏழை எளிய மக்களின் வரப்பிரசாதமாக அமைந்துள்ள தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் நிதியுதவி.. ஜோதிகாவுக்கு குவியும் பாராட்டு !

ஜோதிகா பேச்சு
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா நடிக்கும் படத்தின் முக்கிய காட்சிகள் அரசு மருத்துவமனையில் படமாக்கப்பட்டது. அப்போது மருத்துவமனையின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், கோயிலுக்கு செலவு செய்வதைவிட மருத்துவமனைகளுக்கு செலவு செய்யுங்கள் எனவும், மருத்துவமனையின் அவல நிலையை கண்டு உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கும் செல்லாமல் திரும்பி வந்து விட்டதாகவும் தனது மனக்குமுறலை விருது விழாவில் கொட்டித் தீர்த்தார்.

அமைச்சரிடம் வழங்கினார்
இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அகரம் அறக்கட்டளை மூலம் நடிகை ஜோதிகா 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கான நிதியை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரிடம் திரைபட இயக்குநர் சரவணன் வழங்கினார்.

இயக்குநர் பேச்சு
மேலும் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு திடல், குழந்தைகள் பிரிவில் வண்ண வண்ண ஓவியங்கள் வரைய அதற்கான செலவுகள் அனைத்தையும் ஜோதிகா ஏற்று அதை செய்துள்ளார். இதுகுறித்து பேசிய திரைப்பட இயக்குனர் சரவணன், மருத்துவமனை அவலம் குறித்து நடிகை ஜோதிகா தெரிவித்திருந்தார்.

காணாமல் போய்விட்டார்கள்
அதன் தொடர்ச்சியாகவே அவர் முதல் கட்டமாக ரூபாய் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை செய்து உள்ளார். ஜோதிகாவின் கருத்து குறித்து பல்வேறு தரப்பினர் சர்ச்சைக்குரிய வகையில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பேசியவர்கள் எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டார்கள். ஆனால் உண்மையாக பேசிய ஜோதிகா இன்று மருத்துவமனைக்கு உதவிகள் செய்துள்ளார் இது முதல் கட்டம் தான் தொடர்ந்து அவர் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குவார் என்றும் தெரிவித்தார்.