Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அப்பாவால் கெட்டுப் போகிறார் பிரசாந்த்...தியாகராஜன் முன் இயக்குனரின் பரபரப்பு பேச்சு
சென்னை : அப்பாவால் தான் நடிகர் பிரசாந்த் கெட்டு போவதாக மேடையில் தியாகராஜன் முன்னிலையிலேயே பிரபல டைரக்டர் பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது. தொடர்ந்து அவர் சொன்ன பல விஷயங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தனது 17 வது வயதிலேயே ஹீரோ ஆனவர் பிரசாந்த். பல பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்து, பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். 1990களில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்த பிரசாந்த் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, வின்னர் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார்.
சமந்தா பதிவிட்ட புகைப்படம்… என்னவா இருக்கும்.. குழப்பத்தில் ரசிகர்கள் !
பிரசாந்த் ரீஎன்ட்ரி
2004 ம் ஆண்டிற்கு பிறகு பிரசாந்த் நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைந்தன. இதனால் ஒரு கட்டத்தில் ஃபீல்ட் அவுட் ஆகும் நிலைமைக்கு வந்தார் பிரசாந்த். நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது அப்பாவும், நடிகருமான தியாகராஜன் இயக்கி, தயாரிக்கும் அந்தகன் படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி ஆக உள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
அப்பா தான் கெடுக்கிறார்
இந்நிலையில் அந்தகன் பட விழா சென்னையில் நடைபெற்றது. இதில் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, டைரக்டர் வெங்கடேஷ், இசையமைப்பாளர் தீனா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய டைரக்டர் ஏ.வெங்கடேஷ், அப்பா தான் பிள்ளைய கெடுக்குறார்ன்னு இன்டஸ்ட்ரில ஒரு பேச்சு இருக்கு. பிரசாந்த்தின் பல படங்கள் தோல்விக்கும் அவரது அப்பா தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
பிரசாந்த் சொன்ன செம பதில்
அப்பாவின் தலையீடு, முடிவுகள் தான் காரணம். அது தான் பிரசாந்த் படங்களின் தொடர் தோல்விகளுக்கு காரணம் என பலரும் சொல்லி வந்தனர். ஒரு கால கட்டத்தில் அதை ஒரு நாள் பிரசாந்த்திடமே சொல்லி விட்டேன். அதற்கு அவர், எந்த அப்பா சார் பிள்ளை உருபடாம போகனும்னு நினைப்பாங்க. எனக்கு எல்லாமே என் அப்பா தான் சார் என்று மிகவும் கெத்தா, நம்பிக்கையா, பெருமையா அப்பா பற்றி தன் அபிப்ராயத்தையும் பாசத்தையும் வெளிப்படுத்தினார் என்றார்.
தியாகராஜனே சொன்ன தகவல்
சமீபத்தில் பேட்டி ஒன்றிலும் நடிகர் தியாகராஜன் இந்த விஷயத்தை குறிப்பிட்டிருந்தார். தனது தலையீடு காரணமாக தான் பிரசாந்த்திற்கு பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனதாக பலரும் சொல்லி வந்தார்கள் என்று கூறி இருந்தார். இதை டைரக்டரும் கூறி இருப்பது, அதற்கு பிரசாந்த் அளித்துள்ள பதில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.