Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தீர்ப்பு வந்த மறுநாளே விடுதலை அறிவித்த முதல்வருக்கு நன்றி - இயக்குநர்கள் சேரன், கவுதமன்
இதுகுறித்து இன்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
மூவரின் விடுதலைக்காக ஒரு இனம் தொடர்ந்து போராடியது. சில தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். நிறைய அமைப்புகள் விடுதலை வேண்டி போராட்டம் நடத்தின.
செங்கொடி என்ற இளம்வயது தங்கை தீக்குளித்தாள். இதெல்லாம் தாண்டி ஒரு தாய் தன் மகனை இளம் வயதில் எதெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ அதையெல்லாம் தொலைத்துவிட்ட மகனை மீட்க 23 வருடங்கள் தொடர்ந்து சிறைக்கும் வீட்டுக்கும் நடந்திருக்கிறாள்.
அது எவ்வளவு துயரம் எவ்வளவு கடினம் என்று யாருக்கும் தெரியாது. தன் மகன் தனக்கு மீண்டும் வருவான் உயிரோடு என்ற நம்பிக்கையில் காத்திருந்த பார்க்கும் தலைவர்களிடம் எல்லாம் கதறி அழுத அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி என்பதே உண்மை.
எத்தனை முறை நடந்தார், எத்தனை மைல் நடந்தார் என்பதை யார் அறிவார்... இரண்டு வருடங்களுக்கு முன்பு மூவருக்கும் தூக்கு உறுதி என கோர்ட்டும் மத்திய அரசும் உத்தரவிட்டபோது இந்த தாய் எப்படி துடித்தாள் என்பதை அருகில் இருந்து பார்த்தேன்...
கிட்டதட்ட மரணக்குழிக்கு அருகில் சென்று வந்திருக்கும் மூவரின் உயிரையும் மீட்டுகொண்டுவந்த அந்த தாய்க்கு முதல்வணக்கம்.
இதில் பங்கெடுத்த அனைத்து தமிழர்களுக்கும் தலைவர்களூக்கும் நன்றிகள்....
முக்கியமாக தீர்ப்பு வந்த மறுநாளே விடுதலை அறிவித்து இனத்தின் மானம் காத்த மூவரின் உயிர்காத்த தமிழக முதல்வருக்கும் நன்றி!
-இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.