திரைத் துளி
நடிகை திவ்யா உண்ணிக்கு இன்று காலை எர்ணாகுளத்தில் திருமணம் நடந்தது.
பிரபல மலையாள நடிகையான திவ்யா உண்ணி "சபாஷ்", "வேதம்", "கண்ணன் வருவான்", "ஆண்டான் அடிமை"போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்துதிருமணம் செய்ய முடிவெடுத்தார்.
அமெரிக்காவில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்தது. அங்கு டாக்டராக பணிபுரியும் சுதிர்சேகர் என்பவர்நிச்சயமாக இன்று காலை எர்ணாகுளத்தில் திருமணம் நடந்தது.
இந்தத் திருமண விழாவில் பல்வேறு தமிழ் மற்றும் மலையாள நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடனங்களில் தனி கவனம் செலுத்துவேன் என்றும் திவ்யாஉண்ணி ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











