Don't Miss!
- News விவாதத்தை கிளப்பும் கெஜ்ரிவால் கைது விவகாரம்? உள்ளே வரும் சர்வதேச நாடுகள்.. என்ன தான் நடக்கிறது!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு கூடுதல் காசு பறித்தால் கடும் நடவடிக்கை-அரசு எச்சரிக்கை
தீபாவளிக்கு வெளியாகும் படங்களைத் திரையிடும் தியேட்டர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் தியேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து தியேட்டர்கள் மீது அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கையில் குதித்துள்ளனர்.
தமிழ் சினிமா நலிவடைந்து விட்டது, மக்கள் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவதில்லை, திருட்டு விசிடி, டிவிடி தொல்லை அதிகரித்து விட்டது என்று தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து புலம்பல்கள் இருந்தவண்ணம் உள்ளது. ஆனால் தியேட்டர்களில் வசூலிக்கப்படும் அநியாய கட்டணத்தால் வெகுண்டுதான் மக்கள் தியேட்டர்களுக்குப் போவதையே கைவிட்டு விட்டனர் என்ற உண்மை அவர்களுக்குப் புரியவில்லை.
தியேட்டர்கள் புதுப் படங்கள் குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது வெளியாகும் படங்களுக்கு தாறுமாறாக கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் தியேட்டருக்குப் போய் படம் பார்க்கலாம் என்ற எண்ணம் வருகிறவர்களும் கூட போகாமல் இருந்து விடுகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தீபாவளியையொட்டி ஒரு வாரத்திற்கு தியேட்டர்களில் தினசரி 5 காட்சிகளைக் காட்டிக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனால் இந்த 7 நாட்களிலும் மிகப் பெரிய அளவில் வசூலை அள்ளிவிட தியேட்டர்காரர்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. படம் எத்தனை நாள் ஓடுமோ என்னவோ என்ற பயத்தில் உள்ள தியேட்டர்காரர்கள், பெருமளவில் கட்டணத்தை வசூலிக்கும் திட்டத்தில் உள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அமைச்சர் செந்தமிழன் அறிவித்துள்ளார்.
தற்போது தீபாவளி படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர். திருப்பூர் பகுதியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து நேற்று ஒரே நேரத்தில் 11 தியேட்டர்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவையில் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த ஒரு தியேட்டரின் உரிமத்தை ரத்து செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேபோல தமிழகம் முழுவதும் ஒரு தியேட்டர் விடாமல் அரசு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பாவி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
-
கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?
-
ஒரு ஊருக்கே கிடா விருந்து.. மகள், மாப்பிள்ளைக்கு தடபுடலாக வந்த உணவு.. அமர்களப்படுத்திய ரோபோ ஷங்கர்!