Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
'உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே'... இளையராஜாவின் குரலைக் கேட்டு ஆர்ப்பரித்தக் கூட்டம்!
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்தார்.
Recommended Video
சென்னை : தன்னை கடவுளுடன் ஒப்பிட்டு, கடவுளை சிறுமைப்படுத்த வேண்டாம் என இளையராஜா கூறினார்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பணியை பாராட்டி, இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கப்பட்டது. சென்னையை அடுத்த மறைமலைநகர் மகேந்திரா சிட்டியில் நடைபெற்று வந்த 5வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவில் நடந்த நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு டிக்கெட் விற்பனையை தொடங்கி வைத்தனர்.
விழாவில் பேசிய விஷால் உள்ளிட்ட பலரும் இளையராஜாவை இசை கடவுள் என புகழ்ந்தனர். பின்னர் பேசிய இளையராஜா கடவுளுடன் தன்னை ஒப்பிட்டு பேச வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது,
"இங்கு பேசிய எல்லோரும் கடவுளை ரொம்ப இறக்கிவிட்டனர். என் லெவலுக்கு கடவுளை எப்படி இறக்க முடியும். அது தவறு. நான் கடவுள் கிடையாது.
நானும் ரத்தமும் சதையும் கொண்ட மனிதன் தான். என்னை கடவுள் என குறிப்பிடாதீர்கள். மற்றவர்களை போல நானும் ஒரு சாதாரண மனிதன் தான்.
இந்த டிக்கெட் விற்பனை தொடக்க விழாவே இவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது என்றால், இசை விழா எப்படி இருக்கும் என யோசித்துக்கொள்ளுங்கள்" எனக் கூறி இதயம் ஒரு கோயில் பாடலை முதல் சரணத்தில் இருந்து அவர் பாடினார்.
ஆத்ம ராகம் ஒன்றில் தான் ஆடும் உயிர்கள் என்றுமே என பாடத் தொடங்கியதும், கூட்டம் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. அவர் அந்த சரணத்தை முழுமையாக பாடி முடிக்கும் வரை ஆர்ப்பரிப்பு தொடர்ந்தது.