அப்பப்பப்பா, தேர்வுக்கு கூட நான் இம்புட்டு கஷ்டப்பட்டது இல்ல: ஜெமினி 'துல்கர்' கணேசன்
Recommended Video

சாவித்ரி ஜெமினி மாதிரி கீர்த்தி சுரேஷும் துல்கரும்- வீடியோ
ஹைதராபாத்: தேர்வுக்கு கூட இவ்வளவு கஷ்டப்பட்டது இல்லை என்று நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மகாநதி. நடிகையர் திலகத்தின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதியில் காதல் மன்னன் ஜெமினி கணேசனாக நடித்துள்ளார் துல்கர் சல்மான்.

மகாநதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் துல்கர் சல்மான் தெலுங்கில் சொந்தக் குரலில் பேசுகிறார். அதற்கான டப்பிங் பணி நடந்து கொண்டிருக்கிறது.
தான் டப்பிங் பேசியபோது எடுத்த சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு துல்கர் கூறியிருப்பதாவது,
தேர்வுகளுக்கு கூட நான் இவ்வளவு கடினமாக உழைத்தது இல்லை. முதன்முறையாக தெலுங்கில் டப் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications