Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
போடாதீங்க, பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க: 100 பிரபல இயக்குநர்கள் கோரிக்கை
சென்னை: ஜனநாயகத்தை காப்பாற்ற லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வெற்றிமாறன் உள்பட 100 பிரபல இயக்குநர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் உள்ள 100 திரைப்பட இயக்குநர்கள் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் ஜனநாயகத்தை காக்க பாஜகவுக்கு எதிராக வாக்களிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான அறிக்கை www.artistuniteindia.com என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் வெற்றி மாறன், ஆனந்த் பட்வர்தன், குர்விந்தர் சிங், கபிர் சிங் சவுத்ரி உள்ளிட்ட 100 பிரபல இயக்குநர்கள் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
வெறுப்பு அரசியல் நடத்துவது, தலித்துகள், இஸ்லாமியர்கள், விவசாயிகளை ஒதுக்குவது, கலாச்சார மற்றும் அறிவியல் மையங்களை அழிப்பது உள்ளிட்ட பல காரணங்களுக்காக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அந்த இயக்குநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

பாசிசம்
நம் நாட்டுக்கு சோதனையான நேரம் இது. நாம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்கள். இந்த நாட்டின் குடிமகனாக இருப்பது சிறப்பான உணர்வு. ஆனால் அது தற்போது ஆபத்தில் உள்ளது. லோக்சபா தேர்தலில் நாம் யோசித்து வாக்களிக்கவில்லை என்றால் பாசிசம் நம்மை மிரட்ட காத்திருக்கிறது.

பிரச்சாரம்
2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அனைத்தும் மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இன்டர்நெட், சமூக வலைதளங்கள் மூலம் வெறுப்பை தூண்டிவிடும்படி பிரச்சாரம் செய்கிறார்கள். தேசபக்தியை வைத்துதான் அவர்களின் வாக்கு வங்கியை வலுப்படுத்துகிறார்கள். யாராவது லேசாக அதிருப்தி தெரிவித்தாலும் தேசதுரோகி என்கிறார்கள். அதிருப்தி தெரிவித்ததால் பிரபல எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களின் உயிர் போயுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

தொழில் அதிபர்கள்
அரசியல் லாபத்திற்காக பாதுகாப்பு படையினரின் உயிரை பணயம் வைக்கிறார்கள். படங்கள், புத்தகங்களை தடை செய்தும், சென்சார் செய்தும் மக்களிடம் உண்மை சென்றடையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். விவசாயிகளை மொத்தமாக மறந்துவிட்டார்கள். இந்தியாவை சில தொழில் அதிபர்களின் போர்டு ரூமாக்கிவிட்டது பாஜக. மோசமான பொருளாதார கொள்கைகளால் பாதிப்பு ஏற்பட்டும் கூட அவை வெற்றி பெற்றது போன்று காட்டியுள்ளனர். இதெல்லாம் பொய் பிரச்சாரத்தால் சாத்தியமாகியுள்ளது.

அரசு
அவர்களை மீண்டும் ஆட்சிக்கு வர விடுவது மிகப் பெரிய தவறு. அதனால் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் அரசை தேர்வு செய்வோம். இது தான் உங்களுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு என்று அந்த இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.