Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாகுபலி போன்ற படத்தை எடுக்க விரும்பவில்லை, பணமும் இல்லை: 'இயக்குனர்' ஏ.ஆர். ரஹ்மான்
மும்பை: பாகுபலி போன்ற பிரமாண்ட படத்தை எடுக்க விரும்பவில்லை, அதற்கு பணமும் இல்லை என்று இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் லே மஸ்க் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். வெர்ச்சுவல் ரியாலிட்டி படமான இதில் நோரா அர்னெசெடர், கை பர்னட், முனிரிஹ் கிரேஸ், மரியம் ஜொராபியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படம் குறித்து ரஹ்மான் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறும்போது,
பிரமாண்டம்
வெர்ச்சுவல் ரியாலிட்டியில் பிரமாண்டம் ஓவராகத் தெரியும். உதராணமாக பாகுபலியில் உள்ளது போன்ற ஒரு போர் காட்சியில் அழுத்தத்தை உணர்வீர்கள். அதுவே 3டியில் கூடுதல் அழுத்தத்தை உணர்வீர்கள்.
பாகுபலி
பாகுபலி போன்ற பிரமாண்ட படத்தை எடுக்க நான் விரும்பவில்லை. ஏன் என்றால் அது போன்ற பிரமாண்ட படங்களை இயக்க பிரமாண்ட இயக்குனர்கள் உள்ளனர். மேலும் என்னிடம் ரூ. 200 கோடி இல்லை.
இசை
நான் இசை, அழகு போன்றவற்றை உருவாக்க விரும்புகிறேன். மக்கள் திரும்பி வர விரும்பாத அளவுக்கு ஒரு உலகை உருவாக்க விரும்புகிறேன். என் படத்தில் நெகட்டிவ் விஷயங்களை கூட கவிதையாக அளிக்க முயற்சி செய்துள்ளேன்.
பிவிஆர்
லே மாஸ்க் என்னும் வெர்ச்சுவல் ரியாலிட்டி படத்தை எடுக்க பிவிஆர் நிறுவனம் ஊக்கிவித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வெர்ச்சுவல் ரியாலிட்டி தான் இனி எதிர்காலம் என்றார் ரஹ்மான்.