வரதட்சணை புகார்.. நடிகர் கிருஷ்ணாவின் வேண்டுகோள்!
சென்னை: மனைவியின் வரதட்சணை புகார் தொடர்பான விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு தருவேன். இதுகுறித்த செய்திகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என்று நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
நான் சினிமாவில் தடம் பதித்த நாள் முதல் இன்று வரை எனக்கு அளவில்லா ஆதரவையும் அன்பையும் அளித்தவர்கள் நீங்கள்.

சற்றும் எதிர்பாராவிதமாக என்மீது வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்றத்தின் படி இருவருக்குமிடையே சமரச பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. எங்கள் இருவருக்குமான விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நம் நாட்டின் சட்ட வீதிமுறைகளை மதிப்பவன் நான். எனவே இவ்வழக்கினை உரிய முறையில் விசாரிக்க எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன்.
இது என் தனிப்பட்ட விஷயம் என்பதால் ஊடகத்திலுள்ள என் நண்பர்களும் மற்றவர்களும் என் அந்தரங்கத்தை மதித்து எனக்கு உதவு வேண்டும் என்பதையே விரும்புகிறேன். ஏனென்றால் இது என்னை நேசிக்கும் பலரை பாதிக்கிறது.
தொடரும் உங்கள் ஆதரவுக்கும் புரிதலுக்கும் நன்றி," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











