Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை.. நடிகர், டாக்டர் ராஜசேகர் உடல் நிலை.. மருத்துவமனை அறிக்கை!
ஐதராபாத்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராஜசேகர் உடல் நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடிகர் ராஜசேகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கடந்த 16 ஆம் தேதி தகவல்கள் வெளியாயின.
தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான் என்று கடந்த 17 ஆம் தேதி உறுதிப்படுத்தினார் டாக்டர் ராஜசேகர்.
பிரபல நடிகை பெயரில் போலி ட்விட்டர் கணக்கு.. போலீஸை திட்டி அவதூறு வீடியோ.. வழக்குப் பதிவு!
வீடு திரும்புவோம்
'என் மனைவி ஜீவிதா, குழந்தைகள் மற்றும் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். மகள்கள் குணமாகிவிட்டார்கள். நானும் ஜீவிதாவும் நன்றாக இருக்கிறோம். விரைவில் வீடு திரும்புவோம் என்று டாக்டர் ராஜசேகர் அதில் கூறியிருந்தார்.
கொரோனா போராட்டம்
இதையடுத்து அவர்கள் நலம்பெற ஏராளமான ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதாகக் கூறினர். இந்நிலையில், அவர் மகள் ஷிவாத்மிகா, கொரோனாவுடன் அப்பா கடுமையாகப் போராடி வருவதாகவும் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் ட்விட்டரில் கூறியிருந்தார்.
வதந்திகள் கிளம்பின
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் உடல் நிலை பற்றி வதந்திகள் கிளம்பின. இது பரபரப்பானது. பின்னர் மற்றொரு ட்வீட்டில், தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. நன்றாக இருக்கிறார். உடல்நலம் பெற்று வருகிறார். உங்கள் பிரார்த்தனைகள் தேவை. பீதியடைய வேண்டாம் என்று ஷிவாத்மிகா கூறினர்.
சீராக உள்ளது
தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவர் உடல் நிலை சீராக உள்ளது. நோயில் இருந்து மீண்டும் வருகிறார். சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுக்கிறார். மருத்துவக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.