Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
திரைத் துளி
மே 29, 2003
இன்று துபாயில் மெகா ஸ்டார் நைட்
சென்னை:
தமிழக திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கும் மெகா ஸ்டார் நைட்-2003 கலை நிகழ்ச்சி இன்று துபாயில்நடக்கிறது.
இதில் பங்கேற்க நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், கார்த்திக், பிரபு உள்ளிட்ட நடிகர், நடிகையரின்கடைசி குழு இன்று அதிகாலை துபாய் புறப்பட்டுச் சென்றது.
துபாயின் இன்றும் லண்டனில் வரும் 31ம் தேதியும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் கலந்துகொள்ள நடிகர், நடிகையர்கள் குழுக் குழுவாகப் புறப்பட்டு துபாய் சென்றுள்ளனர்.
கடைசிக் குழு இன்று அதிகாலை கிளம்பிச் சென்றது.
இதில் விஜயகாந்த், சூர்யா, பிரபு, கார்த்திக்,ஜெயராம், எஸ்.எஸ்.சந்திரன், நடிகைகள் மீனா, தேவயானி, ஜோதிகா உள்ளிட்டோரும்,தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளிதரன், ஆர்.பி.செளத்ரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இன்று மாலை துபாயில் உள்ள ஷார்ஜா விளையாட்டு அரங்கத்தில் முதல் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் அங்கிருந்து நாளை முதல் நடிகர், நடிகைகள் லண்டனுக்கு குழுக் குழுவாகச் செல்கின்றனர்.31ம் தேதி லண்டனில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
இந்தக் கலை நிகழ்ச்சிக்கு லண்டனில் வசிக்கும இலங்கைத் தமிழர்களிடையே கடும் எதிர்ப்புகிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- துபாய் புறப்பட்டது நடிகை, நடிகர் குழு