பாவனா கடத்தல் சக்சஸாகி இருந்தால் திலீப்புக்கு ரூ. 62 கோடி கிடைத்திருக்குமாம்
திருவனந்தபுரம்: பாவனா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் திலீப்பின் வங்கி கணக்குகளை முடக்க உள்ளது அமலாக்கத் துறை.
நடிகை பாவனாவை ஆள் வைத்து கடத்தி மானபங்கப்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் ஆலுவாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக திலீப் பாவனாவை அசிங்கப்படுத்தியதாக கூறுவதில் உண்மை இல்லையாம். அதையும் தாண்டி ஏதோ பெரிய காரணம் இருக்கிறதாம்.
பாவனா கடத்தல் மட்டும் வெற்றிகரமாக முடிந்திருந்தால் திலீப்புக்கு ரூ. 62 கோடி கிடைத்திருக்கும் என்று முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி தெரிவித்துள்ளார். ஆனால் அது என்ன கணக்கு என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
திலீப்புக்கும் துபாயை சேர்ந்த கருப்பு பண கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திலீப்பின் வங்கி கணக்குகளை முடக்க திட்டமிட்டுள்ளது அமலாக்கத்துறை.


Click it and Unblock the Notifications











