அழுவதா, சிரிப்பதான்னே தெரியல: ஸ்ரீதேவியின் கணவர் வருத்தம்
Recommended Video

மும்பை: இந்த நேரத்தில் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை என ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
65வது தேசிய விருதிகள் அறிவிக்கப்பட்டது. இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அவர் கடைசியாக நடித்த மாம் படத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கூறியதாவது,

கொண்டாட்டம்
ஒரு குடும்பமாக இந்த நல்ல விஷயத்தை கொண்டாடுவதா வேண்டாமா என்று தெரியவில்லை. இதை கேட்டு மகிழ்ச்சியில் சிரிப்பதா இல்லை ஸ்ரீயை நினைத்து அழுவதா என்று சத்தியமாக தெரியவில்லை.

ஸ்ரீதேவி
இந்த தேசிய விருது அவர் இறந்த பிறகு கிடைத்துள்ளது. ஆனால் இதை நாங்கள் உயிருள்ள வரைக்கும் மறக்க மாட்டோம். அவர் தான் நடித்த 300க்கும் மேற்பட்ட படங்களில் சிறப்பாக நடித்தவர். அவரின் புகழ் என்றும் மறையாது என்று தெரிவித்துள்ளார் போனி கபூர்.

அண்ணி
ஸ்ரீ தற்போது நம்மிடையே இல்லை. ஆனால் அவரின் படங்கள், நினைவு என்றுமே நம்முடன் இருக்கும். இந்த விருது ஸ்ரீக்கு பெரிய விஷயம், எங்களுக்கும் தான். நன்றி என்று போனி கபூரின் தம்பியும், நடிகருமான அனில் கபூர் கூறியுள்ளார்.

எதிர்ப்பு
ஸ்ரீதேவி இறந்துவிட்டதால் அவருக்கு இந்த விருதை அளிக்கக் கூடாது என்று தேர்வுக் குழுவிடம் தெரிவித்ததாக தேசிய விருதுகள் தேர்வுக் குழு தலைவர் சேகர் கபூர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications