Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திருட்டு சிடி தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்... எச்சரிக்கும் லைக்கா!
சென்னை: தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் திருட்டு சிடியைக் கட்டுப்படுத்த லைக்கா நிறுவனம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
டார்லிங் புகழ் சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
திருட்டு சிடி
இப்போதெல்லாம் படம் வெளியாகும் நாளிலேயே அப்படத்தின் திருட்டு சிடியும் வெளியாகி விடுகிறது. இது தயாரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. திருட்டு சிடியை ஒழிக்கும் முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்றாலும் கூட அதனால் பெரிய நன்மைகள் எதுவும் உண்டாகவில்லை.
லைக்கா
இந்நிலையில் லைக்கா நிறுவனம் திருட்டு சிடியைக் கட்டுப்படுத்த ஒரு புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது. நாளை வெளியாகும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்திற்கு ட்ரேட்மார்க் பதிவு ஒப்புதல் எண்ணை (O-0000780028) அறிவுசார் காப்புரிமை மையத்திலிருந்து இந்நிறுவனம் வாங்கியுள்ளது.
தரவிறக்கம்
இப்படத்தை யாராவது பதிவேற்றம் மற்றும் தரவிறக்கம் செய்தால் அவர்கள் மீது லைக்கா நிறுவனம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். திரையுலகில் இதனை புது முயற்சி என்று கூறியிருக்கும் லைக்கா இதன் மூலம் திருட்டு சிடி தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் எச்சரித்துள்ளது.
24
சமீபத்தில் சூர்யாவின் 24, ஜி.வி.பிரகாஷின் பென்சில் மற்றும் சிம்புவின் இது நம்ம ஆளு ஆகிய படங்களுக்கு வெளியான இரண்டொரு நாட்களிலேயே திருட்டு சிடி வெளியாகி விட்டது. இந்த 3 படங்களின் தயாரிப்பாளர்களுமே இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் அதற்குப் பின் அந்தப் புகாரின் நிலை என்ன? அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? போன்ற விவரங்களை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடவில்லை. திரையுலகினர் ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
ஊரே இளையராஜா பாட்டு கேட்கும்.. ஆனால் அவரோ.. இயக்குநர் சொன்ன சுவாரஸ்யமான விஷயம்
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்