Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
எந்திரன் 2 தொடக்க விழா எளிமையாக முடிந்ததா?
சென்னை: நடிகர் ரஜினி நடிக்கவிருக்கும் எந்திரன் 2 படத்தின் தொடக்க விழா இன்று எளிமையாக நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ரஜினி தற்போது பா.ரஞ்சித்தின் கபாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது பிறந்த நாள் தினத்தில் எந்திரன் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக எந்திரன் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தள்ளிப்போகலாம் என்று தகவல்கள் வெளியானது.(இதைப் பற்றி நாம் ஏற்கனவே மழையால் தள்ளிப்போகிறதா எந்திரன் 2 அறிவிப்பு? என்று செய்தி கொடுத்திருந்தோம்)
இந்நிலையில் இன்று மிக எளிமையாக இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொண்டு படத்தின் பூஜையை மிக எளிமையாக நடத்தி விட்டதாக கூறுகிறார்கள்.
வரும் 14ம் தேதி முதல் எந்திரன் 2 வின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ஜனவரி மாதத் தொடக்கம் அல்லது பொங்கல் கழித்து ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எந்திரன் 2 குறித்து இயக்குநர் ஷங்கர் இதுவரை எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.