சத்யராஜின் "கணக்கை" முடக்கிய ஃபேஸ்புக்: காரணம் மகன் சிபி
சென்னை: நடிகர் சத்யராஜ் பெயரில் துவங்கப்பட்ட போலி ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
நடிகர் சத்யராஜ் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இல்லை. பாகுபலி 2 படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் ட்விட்டரில் உள்ள சிபியிடம் தான் சத்யராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சத்யராஜின் பெயரில் யாரோ ஃபேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கியுள்ளனர். இதை பார்த்த சிபி ட்விட்டரில் கூறியதாவது,
https://m.facebook.com/ActorSathyaraaj/ ...அப்பா பெயரில் சர்ச்சை கருத்துகளை போஸ்ட் செய்யும் போலி பக்கம். இது குறித்து புகார் தெரிவிக்குமாறு நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இதை பார்த்த பலரும் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த போலி பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications