Don't Miss!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'இதுதான் நம்பர், லைன்ல வாங்க' பிரபல ஹீரோ பெயரில் இளம் பெண்களிடம் மோசடி..பரபர விசாரணையில் போலீசார்!
ஐதராபாத்: பிரபல ஹீரோ பெயரில் சமூக வலைத்தளத்தில் போலியாகக் கணக்குத் தொடங்கி இளம் பெண்களை ஏமாற்றும் இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
நடிகர், நடிகைகள் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே தனி கிரேஸ்தான். அவர்களுடன் பேசவேண்டும், செல்ஃபி எடுக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு.
பெண் ரசிகைகளும் இதே ஆசையில் உள்ளனர். அவர்களது சமூக வலைத்தளக் கணக்குகளையும் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டா
பிரபல தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா. 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பிரபலம் அடைந்தவர். இவர் நடித்துள்ள படங்கள் தமிழிலும் வெளியாகி உள்ளன. அவர் நடித்து சமீபத்தில் வெளியான, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படம் தமிழிலும் ரிலீஸ் ஆனது.
இதில் நான்கு கெட்டப்பில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார்.
ஏராளமான ரசிகைகள்
அவர் ஜோடியாக ராஷி கண்ணா, கேத்தரின் தெரசா, இஷபெல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆன இந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழ், தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரசிகைகளும் அதிகமாக உள்ளனர்.
போலி கணக்கு
இந்நிலையில், அவர் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலியாகக் கணக்குத் தொடங்கி ஒருவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். ரசிகைகள் பேசினால், அவர்களுக்கு, இதுதான் என் செல்நம்பர் என்று ஒரு எண்ணைக் கொடுத்து, வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பச் சொல்வார். அது விஜய் தேவரகொண்டாதான் என நினைத்து பல இளம் பெண்கள் அவருடன் பேசியுள்ளனர். இதன்மூலம் அவர் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
யார் அந்த டூப்ளிகேட்
என்ன மாதிரியான மோசடி என்பது தெரியவில்லை. இதுபற்றி விஜய் தேவரகொண்டாவுக்கு தகவல் தெரிய வந்தது. இதை அடுத்து, தனது உதவியாளர் கோவிந்த் உதவியுடன், யார் அந்த டூப்ளிகேட் என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்கினார். ரசிகை என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, அவரிடம் சாட் செய்தனர்.
சைபர் கிரைம் போலீஸ்
அப்போது, தான் நடிகர் விஜய் தேவரகொண்டாதான் என்று மிதப்பிலேயே நிஜ விஜய் தேவரகொண்டாவுடனும் பேசியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்துள்ள அவர்கள், அந்த போலி விஜய் தேவரகொண்டாவைத் தேடி வருகின்றனர். இந்த செய்தி டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.