Don't Miss!
- Technology
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
6 மணிக்குள் கணவருடன் பேசி சமாதானமாகப் போங்க: நடிகை ரம்பாவுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: கணவன், மனைவி இடையேயான பிரச்சனையை இன்று மாலை 6 மணிக்குள் பேசித் தீர்க்குமாறு நடிகை ரம்பாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை ரம்பாவுக்கும், கனடாவில் செட்டிலான தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதனுக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரம்பா கனடாவில் செட்டில் ஆனார்.
இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான அவர் கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு இந்தியா வந்துவிட்டார்.

நீதிமன்றம்
இந்தியா வந்த பிறகு ரம்பா தன்னை தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 2 குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியாக வாழ முடியவில்லை என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

ரம்பா
ரம்பா மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரம்பா தனது 2 மகள்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது கணவரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

சமரசம்
மனுவை விசாரித்த நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது, கணவனும், மனைவியும் தங்களுக்கு இடையேயான பிரச்சனையை சமரச மையத்தில் வைத்து இன்று மாலை 6 மணிக்குள் பேசித் தீர்க்க வேண்டும் என்றது.

நடிப்பு
ரம்பாவுக்கு மீண்டும் நடிக்க ஆசை வந்ததால் தான் அவர் கணவரை பிரிந்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் கணவருடன் சேர உள்ளார்.
-
சிவகுமார் மோடுக்கு மாறிய ரன்பீர் கபூர்.. செல்ஃபி எடுத்த ரசிகரின் போனை தூக்கி எப்படி வீசுறாரு பாருங்க
-
உச்ச நடிகர் காது வரை சென்ற அந்த பட்டம் விஷயம்.. மாஸ் நடிகரின் நடவடிக்கையால் ரொம்ப அதிருப்தியாம்?
-
அய்யோ.. அட்லியா? வேண்டவே வேண்டாம்.. ஏகே 63 தகவலால் பதறிப்போன அஜித் ரசிகர்கள்.. டிரெண்டாகும் மீம்ஸ்!