ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த மலையாள நடிகர்...புதிய டீமுடன் களமிறங்கும் நெல்சன்
சென்னை : நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய படமான ஜெயிலர் படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
Recommended Video
ஜெயிலர் படத்தின் ஷுட்டிங் நேற்று சென்னையில் துவங்கப்பட்டது.சென்னையில் போலீஸ் ஸ்டேஷன் போன்று அமைக்கப்பட்டுள்ள செட்டில் 2 நாட்கள் ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய லெகேஷனுக்கு படக்குழு மாற உள்ளது.
ஜெயிலர் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதை முன்னிட்டு ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரபலங்கள் பலரும் இதை பாராட்டி உள்ளனர்.

கன்ஃபார்ம் செய்த ரம்யா கிருஷ்ணன்
இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்பது மட்டும் தான் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர், நடிகைகள் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் தான் ஜெயிலர் படத்தில் நடிப்பதாக ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் தனது பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

ஜெயிலர் ஷுட்டிங் துவங்கியது
இந்த சமயத்தில் நேற்று துவங்கிய ஷுட்டிங்கில் யாரெல்லாம் பங்கேற்றார்கள்? ரஜினி கலந்து கொண்டாரா? என்ற கேள்விகள் பரவலாக கேட்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் ஜெயிலர் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயிலரில் இணைந்த மலையாள நடிகர்
லேட்டஸ்ட் தகவலின்படி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகிபாபு ஜெயிலர் படத்தில் நடிப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. நேற்று துவங்கிய ஷுட்டிங்கில் இவர்கள் இருவருமே பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் மலையாள நடிகர் விநாயகனும் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யோகிபாபு மற்றும் விநாயகன் போலீஸ் ஸ்டேஷனில் பேசிக் கொள்ளும் சீன்கள் தான் நேற்று எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

யார் இந்த விநாயகன்
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல முகங்களைக் கொண்ட விநாயகன் ஏற்கனவே தமிழில் திமிரு, சிலம்பாட்டம், சிறுத்தை, மரியான் படத்தில் நடித்துள்ளார். சில தெலுங்குனா இந்தி படங்களிலும் கூட நடித்துள்ளார். இவர் தற்போது தமிழில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.விநாயகன் பல படங்களில் வில்லன் ரோலில் நடித்துள்ளதால் ஜெயிலர் படத்திலும் இவர் வில்லனாக நடிக்கிறாரா என தெரியவில்லை.

அடுத்த கட்ட ஷுட்டிங் எங்கே
ஜெயிலர் படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங்கிற்காக ஐதராபாத்தில் செட் தயாராகி வருவதாகவும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் இங்கு தான் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏகே 61 படத்திற்காக வங்கி கிளையை செட் போட்டது போல், தற்போது ஜெயிலர் படத்திற்காக சிறைச்சாலையை செட் போட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இவர் தான் வில்லனா
கன்னட டாப் நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் மிக முக்கியமான ரோலில் நடிக்க உள்ளதாகவும், ஜெயிலர் படத்தில் அவர் தான் வில்லன் என்றும் சொல்லப்படுகிறது. நெல்சன் படத்தில் வழக்கமான நடிகர்கள் இல்லாமல் கன்னடம், மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதால், நெல்சனின் புதிய டீமின் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











