Just In
- 7 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 7 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 8 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 9 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Automobiles
அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
50 ஆண்டுகளுக்கு முன் ரஜினி படித்த பள்ளியை சீரமைக்கும் நண்பர்களும் ரசிகர்களும்!

அவரோடு இந்தப் பள்ளியில் படித்த பல நண்பர்கள் இன்று வெவ்வேறு துறைகளில் உள்ளனர். சிலர் ரஜினியை நீண்ட வருடங்களாக பார்க்கக் கூட இல்லை. சிலர் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் ரஜினியுடன் படித்த அந்த நாட்களின் நினைவுகளை பொக்கிஷமாய் சுமந்து வருபவர்கள்.
ரஜினியுடன் பணியாற்றி, அவரது சினிமா வாழ்க்கைக்கே முதல் சுழி போட்ட அவரது உயிர் நண்பர் ராஜ் பகதூர் தலைமையில் ரஜினியின் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு நல்ல விஷயத்தை ஆரம்பித்துள்ளனர்.
ரஜினி படித்த இந்த கவிபுரம் அரசு உதவிபெறும் மாதிரி தொடக்கப் பள்ளியை அனைத்துவிதங்களிலும் முன் மாதிரிப் பள்ளியாக உயர்த்த இந்த நண்பர்களும் சில ரஜினி ரசிகர்களும் கரம் கோர்த்துள்ளனர்.
பள்ளிக் கட்டடங்களை சீரமைத்தல், கம்ப்யூட்டர் பற்றி பெரிதாக தெரியாத அந்தப் பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் உபகரணங்கள் வாங்கித் தருதல் என பெரிய அளவில் இப்பள்ளியைப் புணரமைக்கிறார்கள்.
பள்ளி சீரமைப்பு பணிகளை நேற்று கவிபுரம் மாதிரிப் பள்ளியில் நடந்த ஒரு விழாவில் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் முறைப்படி தொடங்கி வைத்தார்.
"வெவ்வேறு இடங்கள், துறைகளில் உள்ள ரஜினியின் நண்பர்களும் அவரது ரசிகர்களும் மேற்கொண்டுள்ள ஒரு அரிய முயற்சி இது. கண்ணுக்கு தெரியாமல், விளம்பரமில்லாமல் ரஜினி செய்யும் பல்வேறு நற்பணிகளை, உதவிகளைச் சிறப்பிக்கும் பொருட்டு, அவரது நண்பர்கள் இந்த முயற்சியை தொடங்கியுள்ளனர். இந்தப் பள்ளி பெங்களூரின் முதன்மைப் பள்ளியாகத் திகழும்," என்றார் ராஜ்பகதூர்.
இதில் ரஜினியின் பங்களிப்பு என்ன என்பது குறித்து ராஜ் பகதூரிடம் கேட்டபோது, அதுகுறித்து எதுவும் இப்போது சொல்வதற்கில்லை என்றார் அவர்.