Don't Miss!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அணிந்துள்ள சிலுவை...கேள்வி கேட்கும் ரசிகர்கள்
சென்னை : நடிகை சமந்தாவை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவாகரத்தை அறிவித்த பிறகு என்ன செய்தாலும் அது டிரெண்டிங் ஆகி விடுகிறது. அவர் என்ன செய்தாலும் அது உடனே பரபரப்பான செய்தியாகி வருகிறது.
பாகுபலி 3 படத்துல அவரோட நடிக்கணும்... பூஜா ஹெக்டேவின் தாறுமாறு ஆசை!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஜனவரி மாதம் தங்களின் 17 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், இருவரும் பிரிவதாக முடிவெடுத்துள்ளதாகவும் அறிவித்தனர். அதற்கு பிறகு தான் இயக்கி வந்த பயணி மியூசிக் வீடியோவில் கவனம் செலுத்த துவங்கினார் ஐஸ்வர்யா.
மருத்துவமனையில் அனுமதி
ஐதராபாத்தில் டைரக்ஷனில் பிஸியாக இருந்த ஐஸ்வர்யா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அதிலிருந்து மீண்டும் ஷுட்டிங்கிற்கு திரும்பிய ஐஸ்வர்யா, போஸ்ட் கோவிட் பாதிப்புக்களால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்த படி ஐஸ்வர்யா போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் செம வைரலாகின.
தனுஷிற்கு தான் இந்த போஸ்டா
மகளிர் தினத்திற்கு இவர் போட்ட போஸ்ட், தனுஷை மறைமுகமாக தாக்குவதாக இருந்தது. இந்த சலசலப்பு ஓய்வதற்குள் ஐஸ்வர்யா இயக்கிய பயணி மியூசிக் ஆல்பத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு, மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், நடிகர் தனுஷும் ஃபிரண்ட் என குறிப்பிட்டு ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இதை பார்த்த ரசிகர்கள், என்னது ஃபிரண்டா என கேட்டு ஷாக் ஆகினர்.
என்னது ஃபிரண்டா
தனுஷின் வாழ்த்திற்கு ஐஸ்வர்யாவும் கூலாக நன்றி என சொன்னார். தனுஷ் ஃபிரண்ட் என குறிப்பிட்டு வாழ்த்து சொன்னதால், ஐஸ்வர்யா தனது சோஷியல் மீடியா பக்கங்களில் தனது பெயரில் இருந்து தனுஷ் பெயரை அகற்றி விட்டதாக தகவல் பரவியது. ஆனால் தற்போது வரை தனது பெயரை தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றி உள்ளாரே தவிர, Profile name ஐஸ்வர்யா கே தனுஷ் என்று தான் உள்ளது.
ஹோலி எப்பவுமே ஸ்பெஷல்
ஐஸ்வர்யாவின் அடுத்தடுத்த பரபரப்புக்களில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது அவர் ஹோலி கொண்டாடிய போட்டோ தான். ஹோலி தினத்தில் தான் தனது அப்பாவின் பெயரை சிவாஜி ராவில் இருந்து ரஜினிகாந்த் என டைரக்டர் கே.பாலச்சந்தர் மாற்றினார். இதனால் ஹோலி எப்போதுமே தங்களுக்கு ஸ்பெஷல் என்று ஐஸ்வர்யா போஸ்ட் போட்டிருந்தார். அதோடு தான் ஹோலி கொண்டாடிய 2 போட்டோக்களையும் பகிர்ந்திருந்தார்.
சிலுவை அணிந்த ஐஸ்வர்யா
அந்த போட்டோவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கழுத்தில் சிலுவை அணிந்திருந்தார். இதை வைத்து சிலுவை அணிவது ஃபேஷனா என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கேட்டு வருகின்றனர். ரஜினிகாந்த் ஆன்மிகவாதி. அவரும் சரி, தனுஷும் சரி கழுத்தில் எப்போதும் ருத்ராட்டசம் அணியும் பழக்கம் கொண்டவர்கள். ஆனால் ஐஸ்வர்யா மட்டும் சிலுவை அணிந்திருக்கிறாரே. ஒருவேளை மதம் மாறி விட்டாரா. இது தான் விவாகரத்திற்கு காரணமா என புதிதாக மற்றொரு காரணத்தை நெட்டிசன்கள் கிளப்பி விட்டுள்ளனர்.