Don't Miss!
- News கிருஷ்ணகிரியில் விழுந்த "அடி".. சரியான பதிலடி தந்த "வேங்கைவயல்".. ஒருத்தரும் ஓட்டுப்போட வரலயாமே
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தாமரையை மாற்றி பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டு நீங்க டபுள் கேம் ஆடுறீங்களே சிபி
சென்னை : மற்ற ஹவுஸ்மேட்களுடன் சேர்ந்து தாமரையை குற்றம் சொல்லி, விமர்சனம் செய்யும் சிபி, தனியாக தாமரையிடம் மாற்றி மாற்றி பேச வேண்டாம் என அட்வைஸ் செய்கிறார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஃபினாலே ரேஸ் நடைபெற்று வருகிறது. டிக்கெட் டு ஃபினாலேவை வெல்ல போவது யார் என்பதற்கான போட்டிகள் இந்த வாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று நடத்தப்பட்ட டாஸ்கில், தாமரையை தவிர மற்றவர்கள் கூடி பேசி, நிரூப்பை வெளியேற்றினர்.
பாப்புலர் ஆன வருண்–அக்ஷரா... நேரில் வாழ்த்திய பிக்பாஸ் பிரபலங்கள்
எனக்கு ஜெயிக்க வேண்டாம்
நிரூப் வெளியேற்றப்பட்டு, டாஸ்க் முடிந்த பிறகு, அவன் இனி என்ன ஆவான் என தனது சந்தேகத்தை பிரியங்காவிடம் கேட்கிறார் தாமரை. இது வாக்குவாதமாக மாறுகிறது. அப்போது, தனக்கு ஜெயிக்க வேண்டும் என்று இல்லை. மக்கள் தன்னை காப்பாற்றுவார்கள் என தாமரை சொல்கிறார். தாமரையின் இந்த வார்த்தையால் அனைவரும் கடுப்பாகிறார்கள். இந்த வார்த்தையை முன்பே சொல்லி இருந்தால் நிரூப்பை வெளியேற்றி இருக்க மாட்டோமே என்கிறார் பிரியங்கா.
தாமரையிடம் பாயும் சஞ்சீவ்
கேம் புரியவில்லை என சொல்லி சொல்லியே எல்லோரையும் ஏமாற்றுகிறாய். ஒருவர் வெற்றி பெறுவார் என்பது கூடவா தெரியாது என சஞ்சீவ், தாமரையிடம் கோபமாக பேசுகிறார். நிரூப் மற்றும் சிபி ஆகியோர் தாமரையை சமாதானம் செய்கிறார்கள்.
தாமரையை விமர்சிக்கும் சிபி
பிறகு வீட்டிற்குள் சென்று பிரியங்கா, சஞ்சீவ், பாவனி, சிபி, அமீர் ஆகியோர் தாமரை கேம் புரியவில்லை என சொல்வதை பற்றி பேசுகிறார்கள். அப்போது பேசும் சிபி, அவர் தெளிவாக தான் விளையாடுகிறார். நாம் தான் புரியாமல் இருக்கிறோம். டாஸ்க் முடிந்த பிறகு தானே அவர் சொன்னார். டாஸ்கிற்கு முன் சொல்லவில்லையே அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏமாற்றுகிறவனை விட ஏமாறுகிறவன் மேல் தான் தப்பு என்கிறார்.
ஏன் ஓட்டை மாற்றவில்லை
அதே சமயம் சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே வந்து தாமரையிடம் பேசும் சிபி, உங்களுக்கு டிக்கெட் ஜெயிக்க வேண்டாம் என நீங்கள் முன்பே நினைத்திருந்தால் ஏன் நிரூப்பிற்கு ஓட்டை போட்டீர்கள். திரும்பி வந்து கேட்கும் போது, அவன் ஓட்டை வேறு யாருக்காவது மாற்றி இருக்கலாமே. நீங்கள் புரியவில்லை என்றால் கேட்டிருக்கலாமே.
மாற்றி பேசாதீர்கள்
புரியவில்லை என்று சொல்லி ஒன்று செய்கிறீர்கள். பிறகு சிறிது நேரத்திலேயே அதை மாற்றி பேசுகிறீர்கள். அப்படி பண்ணாதீர்கள். மாற்றி மாற்றி பேசாதீர்கள் என தாமரைக்கு அட்வைஸ் செய்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், தாமரைக்கு அட்வைஸ் செய்வது இருக்கட்டும். முதலில் நீங்கள் யார் பக்கம். உள்ளே மற்றவர்களுடன் சேர்ந்து தாமரைக்கு எதிராக பேசுகிறீர்கள். வெளியே வந்து தாமரைக்கு ஆதரவாக அவருக்கு அட்வைஸ் செய்கிறீர்கள். நீங்கள் டபுள் கேம் ஆடாதீர்கள் என சிபியை கலாய்த்து வருகிறார்கள்.