Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அம்மாவிடம் கேளுங்கள், தரப்படும்!- ஃபெப்சி தலைவர் அமீர்
ராஜீவ் கொலை வழக்கில் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு குறித்து ஃபெப்சி தலைவர் அமீர் மற்றும் செயலாளர் ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர்கள் துயர் துடைக்கும் போராட்டங்களில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனும் தன் பங்குக்கு பல்வேறு அறவழி போராட்டங்களை நடத்தியுள்ளது.
குறிப்பாக கடந்த 21.10.2008-ல் சென்னையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மற்றும் 5.11.2008 அன்று சாலிகிராமத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்திக் காட்டியுள்ளோம்.
இந்த அறவழிப் போராட்டங்களில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளோம்.
கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்பதற்கேற்பவும், அம்மாவிடம் கேளுங்கள், அவர் இல்லையென்று சொல்லுவதில்லை என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக, புரட்சித் தலைவி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உயர்ந்த எண்ணத்தோடு சட்டமன்ற வரலாறு போற்றும் தீர்மானத்தை இயற்றி தூக்கு தண்டனை கைதிகளை விடுவிக்க வழிவகை செய்து கொடுத்ததற்காக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.