Just In
- 8 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 8 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 11 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சம்பள உயர்வு கேட்டு போராட்டம் - பெப்சி அறிவி்ப்பு
இனி பெப்சி அமைப்புக்கும் எங்களுக்கும் ஒப்பந்தம் எதுவும் கிடையாது, இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக் கொள்வோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து விட்டதால், தயாரிப்பாளர்களுக்கு எதிராக போராட்டம் தொடரும் என பெப்சி அமைப்பு அறிவித்துள்ளது.
23 சினிமா தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பெப்சி. சம்பள உயர்வு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் தங்கள் இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்து கொள்ளலாம் என்று அதிரடி தீர்மானம் நிறைவேற்றினர். இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க பெப்சி தொழிலாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டம் வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடந்தது.
சங்கத்தின் தலைவர் ராமதுரை, செயலாளர் சிவா, பொருளாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் பாரம்பரியம் மிக்க பெப்சியை பற்றி தவறான செய்தி பரப்பியதை தயாரிப்பாளர் சங்கம் வாபஸ் பெற வேண்டும். 4 ஆண்டுகளை கடந்து 5 ஆண்டுகள் ஆன பின்பும் சம்பளத்தை உயர்த்தி தராமல் இழுத்தடிப்பது தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகும்.
பெப்சியுடன் தயாரிப்பாளர் சங்கம் ஊதிய உயர்வு சம்பளத்தை ஏற்படுத்தவில்லை என்றால் 23 சங்கங்களும் இணைந்து ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம். இதே கால கட்டத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தவும் பெப்சி முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.