Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மத்திய அமைச்சரிடம் 8 கோரிக்கைகளை முன்வைத்த பெப்சி... நிறைவேறுமா?
சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் 8 கோரிக்கைகளை பெப்சி(தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு) தலைவர் ஜி.சிவா முன் வைத்திருக்கிறார்.
பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு நேற்று வருகை புரிந்தார். அவரை நடிகர் சங்கத் தலைவர் நாசர், பெப்சி தலைவர் சிவா மற்றும் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
1. மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
2.இலவச மருத்துவ உதவி, மருத்துவ காப்பீடு, இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கிட வேண்டும்.
3. வாரிசுகளுக்கு கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் இடம் வழங்க வேண்டும்.
4. வாரிசுகளுக்கு வங்கிக்கடன் வழங்க வேண்டும்.
5.பாரத பிரதமரின் சுரக்ஷா, பீம யோஜனா திட்டங்களின் கீழ் வாழ்நாள் காப்பீடு வழங்க வேண்டும்.
6.ஓய்வுதியம் வழங்க வேண்டும்.
7. மத்திய அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த குறைந்த கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.
8.அரசின் சாதனை மற்றும் விளம்பர படங்களில் பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும்.
மேற்சொன்ன கோரிக்கைகளை திரைப்படத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு நிறைவேற்றித் தரவேண்டும் என்று பெப்சி அமைப்பு கோரிக்கை வைத்திருக்கிறது.
இந்த கோரிக்கைகளை படித்துப் பார்த்த அமைச்சர், அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் செய்து கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.