Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
பெப்சி - தயாரிப்பாளர் மோதல்... எப்போ முடியும்?
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்சி) சேர்ந்த தொழிலாளர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான சம்பளத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாக, இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, தமிழக அரசின் தொழிலாளர் நல ஆணையாளர், இரண்டு தரப்பினரையும் அழைத்துப் பேசினார். இதுவரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது.
அதைத் தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூடியாது. அதில், புதிய சம்பள விகிதம் பற்றி ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
இதேபோல் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவும் நேற்று கூட்டப்பட்டது. அதில், ஏராளமான பட அதிபர்கள் கலந்துகொண்டார்கள். கூட்டத்தில், தொழிலாளர்களின் சம்பளம் பற்றி ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பட அதிபர்கள்-'பெப்சி' தொழிலாளர்கள் இடையேயான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது.
தொழிலாளர் நல ஆணையாளர் முன்னிலையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், இரு தரப்பினர் இடையே உடன்பாடு ஏற்படுமா? என்பதை சினிமாவுலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது.