Just In
- 9 min ago
பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!
- 8 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 9 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெப்சி - தயாரிப்பாளர் மோதல்... எப்போ முடியும்?

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்சி) சேர்ந்த தொழிலாளர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான சம்பளத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாக, இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, தமிழக அரசின் தொழிலாளர் நல ஆணையாளர், இரண்டு தரப்பினரையும் அழைத்துப் பேசினார். இதுவரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது.
அதைத் தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூடியாது. அதில், புதிய சம்பள விகிதம் பற்றி ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
இதேபோல் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவும் நேற்று கூட்டப்பட்டது. அதில், ஏராளமான பட அதிபர்கள் கலந்துகொண்டார்கள். கூட்டத்தில், தொழிலாளர்களின் சம்பளம் பற்றி ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பட அதிபர்கள்-'பெப்சி' தொழிலாளர்கள் இடையேயான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது.
தொழிலாளர் நல ஆணையாளர் முன்னிலையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், இரு தரப்பினர் இடையே உடன்பாடு ஏற்படுமா? என்பதை சினிமாவுலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது.